districts

img

நீட் தேர்வை ரத்த செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 8-  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை  வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் நடத்தி யது.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திங்க ளன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் வடக்கு மாவட்டச் செயலாளர் க.மணி தலைமை  ஏற்றார். கோரிக்கைகளை ஆதரித்து தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி சண். முத்துக்குமார்,  திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி முகில் ராசு, புரட்சிகர  மக்கள் அதிகாரம் கார்த்திகேயன், ஆதித்தமிழர் பேரவை வழக்கறிஞர் அணி செயலாளர் பெரியார் தாசன், தீண்டாமை  ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ் உள் ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.