districts

img

நீர்மட்டம் குறைந்ததால் வெளியே தெரியும் டண நாயக்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோவில்

கோபி, ஏப். 9- பவானிசாகர் அணை நீர்மட்டம் 47  அடியாக குறைந்ததால் 6 ஆண்டுக ளுக்கு பிறகு டணநாயக்கன் கோட்டை  மாதவராய பெருமாள் கோவில் வெளியே தெரிகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப் பூர், கருர் மாவட்டங்களில் 2 இலட் சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. தற்போது  அணையின் நீர்மட்டம் 47 அடியாக குறைந்து விட்டதால் அணை நீர்தேக்கப் பகுதியில் உள்ள பழங்கால கோயில் கள் மற்றும் டணநாயக்கன்கோட்டை வெளியே தெரிகின்றன. கடந்த 1948  ஆம் ஆண்டு பவானியாறும் மோயா றும் கூடுமிடத்தில் கீழ்பவானி அணை கட்டும் பணி துவங்கியது. இதனால் அணை நீர்த்தேக்கப்பகுதியில் இருந்த  வடவள்ளி, பீர்கடவு, பட்டரமங்கலம், குய்யனூர் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட  கிராம மக்களுக்கு பண்ணாரி வனப்ப குதியில் நிலம் வழங்கப்பட்டு குடியமர்த் தப்பட்டனர். அணைக்குள் இருந்த பழமை வாய்ந்த கோயில்களில் உள்ள  விக்கிரகங்கள் பத்திரமாக எடுத்து வரப் பட்டு பவானிசாகரில் கீழ்பவானி வாயக் காலின் வலதுபுறத்தில் கோயில் கட்டப்பட்டு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 1953 -யில் குடமுழுக்கு செய்யப்பட்டது. அணைக்குள் நீரில் மூழ்கிய கிராமங்கள் இருந்த சுவடு காணாமல் போய்விட்டன. ஆனால் டணநாயக்கன் கோட்டையில் உள்ள மாதவராய பெருமாள் கோயில், சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோயில், பீரங்கித்திட்டு போன்றவை நீர்மட்டம் குறைந்த காலத்தில் கம்பீர மாக காட்சியளிக்கின்றன. தற்போது  அணையின் நீர்மட்டம் 47 அடியாக உள் ளதால் மாதவராய பெருமாள் கோயில் முழுவதுமாக காட்சியளிக்கிறது. கோயில் உள்பிரகாரத்தில் 32 தூண்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 12 முதல் 14 அடி வரை  நீர்மட்டம் குறைந்தால் சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோயில், பீரங்கித் திட்டு முழுவதுமாக காட்சியளிக்கும். கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு  தொடர்ந்து 6 ஆண்டுகளாக பவானிசா கர் அணையின் நீர்மட்டம் குறையா மல் இருந்ததால் வெளியே தெரியாத  டணாநாயக்கன் கோட்டை மாதவராய  பெருமாள் கோயில் நீர்மட்டம் குறைந் ததால் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் வெளியே தெரிகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் இவை  என கல்வெட்டுக்கள் மற்றும் வரலா றுகளில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கல்வெட்டுகளை தொல்லியல் வல்லுனர்கள் ஆராயந்தால் மேலும் பல வரலாறுகள் தெரிய வரும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் இக்கோயில்களை பொதுமக் கள் சென்று பார்க்க வசதி இல்லை. எனவே அணையில் நீர்மட்டம் குறைந்த காலங்களில் இக்கோயில்களை காண  பொதுப்பணித்துறை படகு வசதி ஏற்படுத்தி தரவேண்டுமென பொது மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.