districts

img

தேசிய அளவிலான போட்டி: அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வு

ஈரோடு, அக்.3- தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட் டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள ஈரோட்டைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆசி ரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், எஸ்கேஎஸ்சி சாலை யில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள் ளது. இப்பள்ளியில் பயிலும் 6 ஆம் வகுப்பு  மாணவி ஆர்.நேத்ரா தேவி மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர் ஆர்.யோகன் ஆகியோர் அக்.1, 2 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு அக்ரோபேட்டிக் ஜிம் னாஸ்டிக் ஸ்டேட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் ஆர்.நேத்ரா தேவி முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்று தங்கம் வெள்ளி பதக்கம் வென்றார். மேலும், ஆர்.யோகன் மூன்றாம் இடம் பெற்று வெண் கல பதக்கம் வென்றார். இதையடுத்து மாநில அளவில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டியில் இருவரும் தேர்வாகியுள்ளனர். இந்த மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரி வித்துள்ளனர்.