நாமக்கல், ஜூன் 18- நாமக்கல் நுகர்வோர் சமரச மையத் தில், 15 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கை, ஒரே பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட் டுள்ளது. நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர் களுக்கு தீர்ப்புத் தொகை வழங்காத 71 வழக்குகளுக்கான சிறப்பு சமரச முகாம் நடை பெற்றது. இதற்கு நீதிபதி டாக்டர் வீ.ராம ராஜ் தலைமை வகித்தார். இதில் 15 ஆண்டு கள் நிலுவையில் இருந்த வழக்கு உட்பட ஏழு வழக்குகளில் தீர்ப்புத் தொகை வழங்கப் பட்டது. நாமக்கல், கணேசபுரம் புதிய தெருவில் வசிப்பவர் ஓய்வு பெற்ற அரசு வாகன ஓட்டு நர் பத்மநாபன் என்பவருக்கு வங்கியில் இருந்து அனுப்பிய ஏடிஎம் அட்டையும், அதன் ரகசிய குறியீடும் அடங்கிய கவரை, நாமக்கல்லில் உள்ள பிரெஞ்ச் கொரியர் நிறு வனம் தவறான நபரிடம் வழங்கியது. கடந்த 2008 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்புத்தொகை மற்றும் அதற்கான வட்டி ரூ.40 ஆயிரத்தை நுகர்வோர் சமரச பேச்சுவார்த்தையில் கொரியர் நிறுவனம் வெள்ளியன்று வழங்கியது. இதேபோல், நாமக்கல் நேதாஜி சிலை அருகில் உள்ள ராயல் சிப்ஸ் கடையில் பொட் டலத்தில் விற்ற பொருளில் போதிய விப ரங்கள் பதிவு செய்யப்படவில்லை. இது குறித்து, நாமக்கல் அருணாச்சலம் தெருவில் வசித்து வரும் முருகேசன், 2011 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வெள்ளி யன்று நடந்த சமரசப் பேச்சு வார்த்தையில், அவர் வாங்கிய பொருளுக்கான விலை ரூ.25 மற்றும் இழப்பீடு தொகை ரூ.2000 சேர்த்து கடை உரிமையாளர் வழங்கினார். தீர்ப்பின் படி நுகர்வோர் நல நிதி செலுத்தப்பட வேண் டிய ரூ.10 ஆயிரத்தை கடை உரிமையாளர் நுகர்வோர் பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பராயனிடம் வழங்கப்பட்டது. அதனை அவர் ஒரு மாத காலத்துக்குள் அரசின் கணக் கில் செலுத்த வேண்டும் என்று சுப்பராய னுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சமரச பேச்சுவார்த்தைக்காக, பர மத்திவேலூர் வழக்கறிஞர் ராமலிங்கம், திருச்செங்கோடு வழக்கறிஞர் பாலசுப்ரமணி யம், நாமக்கல் வழக்கறிஞர்கள் அய்யாவு, குமரேசன், சதீஷ்குமார், முரளி, குமார், அந் தோணி, புஷ்பதாஸ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மத்தியஸ்தர்களாக செயல்பட்ட னர்.