districts

img

நாமக்கல்: தூய்மைப் பணியாளர்கள் தர்ணா

நாமக்கல், மே 8- பணி நிரந்தரம் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியு றுத்தி நாமக்கல் அரசு மருத் துவக்கல்லூரி தூய்மைப் பணியாளர்கள் 500க்கும் மேற் பட்டோர் தர்ணாவில் ஈடுபட்ட னர். நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் சுமார் 500க்கும் மேற் பட்ட பெண், ஆண் தூய்மைப்  பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். நீண்ட நாட்களாக பணி  நிரந்தரம், மாத விடுமுறை உள்ளிட்ட எவ்வித மான சலுகைகளையும் சம்பந்தப்பட்ட தனி யார் நிறுவனம் வழங்குவதில்லை. இதனை கண்டித்து பலமுறை தர்ணா, ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டனர். எனினும் கோரிக் கைககள் நிறைவேறாத நிலையில், நாமக் கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.