districts

img

நாமக்கல் கவிஞர் நினைவுதினம்

நாமக்கல், ஆக.24- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் 51 ஆவது  நினைவுதினம் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் 51 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது பெயர் சூட்டப்பட்ட  அரசு மகளிர் கலைக்கல்லூரி முன்பு இருக்கும் அவரது மார்பளவு உருவச்சிலைக்கு, நாமக்கல் கவிஞர் இராமலிங் கம் பிள்ளை அறக்கட்டளை சார்பாக மாலையணித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவர் இரா. குழந்தைவேல் தலைமை வகித்தார். நாமக்கல் கவிஞர் இராம லிங்கம் அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் மா.கோவிந்த ராசு முன்னிலை வகித்தார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை தலைவர் எஸ்.சுரேஷ், செயலாளர் ஆர்.வசந்தகுமார், சட்ட ஆலோசகர் எஸ்.ஏ.நாகராஜன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.