districts

img

நாமக்கல் மாநகராட்சியின் முதல் மேயர் பொறுப்பேற்பு

நாமக்கல், செப்.16- நகராட்சியாக இருந்த நாமக்கல், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அதன் முதல் மேயராக து. கலாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். நாமக்கல் நகராட்சியை மாநகராட்சி யாக தரம் உயர்த்த வேண்டும் என  கோரிக்கை எழுந்த நிலையில், தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாமக் கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்தி,  நகராட்சி தலைவர் கலாநிதி முதல் மேய ராகவும், துணைத்தலைவர் பூபதி துணை மேயராக செயல்படுவார்கள் என அறிவித்தார். இந்நிலையில், நாமக் கல் மாநகராட்சியின் முதல் கூட்டம் திங்க ளன்று காலை மாநகராட்சி கூட்டரங் கத்தில் நடைபெற்றது. அப்போது, மேய ராக கலாநிதி, துணை மேயராக பூபதி  ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண் டனர். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் வெள்ளி செங்கோலை மேயர் கலாநிதிக்கு வழங்கி, பொன்னாடை அணிவித்து பூங் கொத்து கொடுத்து வாழ்த்து தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாந கராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். இதன்பின் மேயர் கலாநிதி தலை மையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, குடிநீர் பிரச் சனை நிலவும் வார்டுகளுக்கு உடனடி யாக குடிநீர் வசதி செய்ய வேண்டும்.  5 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில்  அதிகளவில் உலாவும் நாய்களை  பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதியதாக இணைக்கப்பட்ட புதிய வார் டுகளில் உள்ள வீடுகளுக்கு மின்  இணைப்பு இதுவரை கொடுக்கப்பட வில்லை. இதுகுறித்து விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற  உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.