districts

நல்லகண்ணு, கக்கன் குடும்பத்தினருக்கு விரைவில் மாற்று வீடு வழங்கப்படும்

சென்னை,மே 12-நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு விரைவில் மாற்று வீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.சென்னை தி.நகரில் குடியிருந்த அரசு வீட்டை காலி செய்ய சொன்னதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மூத்த தலைவர் வேறு வீட்டுக்கு சென்றுவிட்டார். அரசின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர்கூறுகையில், வீடுகள் மிகவும் பழு தடைந்த நிலையில் இருப்பதால், 2011-ல் வீட்டு வசதி துறை அமைச்சரால் தமிழ் நாடு சட்டசபையில், 119 குடி யிருப்புகளை இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து குடியிருப்பு தாரர் அனைவருக்கும் குடியிருப்பை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப் பட்டது. இதை எதிர்த்து குடியிருப்புதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்தனர்.பின்னர் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி 25.7.2014ல் உயர்நீதிமன்றம் 3 மாத காலக்கெடுவிற்குள் வீடுகளை காலி செய்யுமாறு உத்தரவிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றதில் தொடர்ந்த வழக்கி னையும்,நிலுவையில் இருந்த வழக்கு களையும் ஒருங்கிணைத்து 5.2.2019ல் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதைத் தொடர்ந்து குடியிருப்பு தாரர்கள் வீடுகளை தாமாக முன்வந்து வாரியத்திடம் காலி செய்து ஒப்படைக்க தொடங்கினர். இதுவரை 96 குடியிருப்புதாரர்கள் வீடுகளைஒப்படைத்துள்ளனர். நல்லகண்ணு15.5.2019 அன்று வீட்டை ஒப்படைத்தார். கக்கன் குடும்பத்தினர் இதுவரை வீட்டினை ஒப்படைக்கவில்லை.சமூகத்தில் முக்கிய பங்காற்றி யவர்களுக்கு வாடகை அடிப்படையில் பொது ஒதுக்கீடு முறையில் வீடுகள்ஒதுக்கீடு வழங்குவது சம்பந்த மாக உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டு தலின்படி, புதிய கொள்கை இறுதி செய்யும் தருவாயில் உள்ளது.இக்கொள்கை இறுதி செய்யப் பட்டவுடன் நல்ல கண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தார் உள்பட இதுபோன்ற பொது வாழ்க்கையில் சமூகத்தில் முக்கிய பங்காற்றியவர் களுக்கு பொது ஒதுக்கீடு அடிப்படை யில் வீடுகள் வழங்குவதற்கு வழி வகை செய்யப்படும்.நல்லகண்ணுவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் கக்கன் குடும்பத்தின ருக்கும் மாற்று வீடு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். துணை முதலமைச்சரும், நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தின ருக்கும் விரைவில் மாற்று வீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.