நாகப்பட்டினம், மார்ச் 17- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நாகப்பட்டினம் மாவட்டக் குழுவின் சார்பில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி எழு திய நூல் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகியும், கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினருமான நாகை மாலி எழுதிய “இந்தியா பாரம்பரியத்தின் வண்ணக் கலவை”என்ற கட்டுரைத் தொகுப்பு வெளியீட்டு விழா நாகப்பட்டி னத்தில் நடைபெற்றது. பாரதி புத்தகாலயத்தின் சார்பில் பதிப்பித்த இந்நூலை கலை இலக்கிய முன்னோடி, தமுஎகச ஸ்தாபகத் தலை வரில் ஒருவரான எஸ்.ஏ.பெருமாள் வெளியிட்டு, நூல் பற்றிய உரையாற்றி னார். நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப் பினர் ஆளூர் ஷாநவாஸ், திராவிட முன் னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலா ளர் என்.கௌதமன் ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, தீக்கதிர் திருச்சி பொறுப் பாளர் ஐ.வி.நாகராஜன், விசிக மாவட் டச் செயலாளர் நாக. அருட்செல்வன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஓ.எஸ்.இப்ராஹிம், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். சிபிஎம் மாநி லக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகை மாலி ஏற்புரை ஆற்றினார். தமுஎகச நாகை மாவட்டத் தலைவர் கவிஞர் ஆவராணி ஆனந்தன் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வை மாவட் டச் செயலாளர் ஆதி.உதயகுமார் தொகுத்து வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.நடராஜன் வர வேற்றார். நாகை கிளை செயலாளர் என்.பாபுராஜ் நன்றி கூறினார்.