திருப்பூர், ஜூன் 30- பக்ரீத் பண்டிகையை ஒட்டி திருப்பூரில் உள்ள பள்ளிவா சல்களில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை மேற்கொண்ட னா். பக்ரீத் பண்டிகையை ஒட்டி திருப்பூர் பெரியகடை வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசல், நொய்யல் வீதியில் உள்ள பள்ளி வாசல், நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளி மைதா னம், எஸ்.ஏ.பி. பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட 92 இடங்களில் வியாழனன்று சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில், ஏரளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகை யில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒருவருக்கொருவர் வாழ்த்து களை பரிமாரிக்கொண்டனர். ஈகைத் திருநாள் என்பதால் ஏழைகள், உறவினர்களுக்கு ஆடு, கோழி ஆகிய இறைச்சி களை வழங்கினர். அதேபோல பல்லடம், தாராபுரம், உடு மலை, ஊத்துக்குளி, மடத்துக்குளம், அவிநாசி உள்ளிட்ட புற நகா் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழு கைகள் நடைபெற்றன.