உதகை, ஏப்.25- குடிநீர் கேட்டு நெல்லியாளம் நக ராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள நெல்லியாளம் நகராட்சி, 16 ஆவது வார்டு கைதகொல்லி அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி அருகே 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் விநி யோகம் முறையாக செய்யப்படுவ தில்லை. மேலும், புதிய குடிநீர் இணைப்பு கேட்டு நெல்லியாளம் நக ராட்சிக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப் பகுதியினர் குற்றம்சாட்டினர். கோடை காலத்தில் குடிநீர் பிரச்ச னைக்கு தீர்வு ஏற்படுத்துவதற்கு நெல்லி யாளம் நகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வரும் நிலை யில், அதுவும் தங்களுக்கு கிடைப்ப தில்லை என கூறி புதனன்று காலை அப் பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் செல்வ ராணி தலைமையில் நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். பின்பு சம்பவ இடத் திற்கு வந்த தேவாலா போலீசார் மற்றும் பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், குடிநீர் பிரச்னைக்கு நிரந் தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறியதால் போராட்டகாரர்கள் நகராட்சி அலுவ லகத்திற்குள் சென்றனர். பின்னர், ஆணை யர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. சீரான குடிநீர் விநியோகம் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதியளித்தார். மேலும் 5 பேருக்கு குடிநீர் இணைப்பு உடனடி யாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வ தாக கூறினர். இதனையடுத்து, பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.