districts

img

விரைவில் செம்மொழி பூங்கா பணிகள் நகராட்சி நிர்வாக இயக்குநர் தகவல்

கோவை, ஜூன் 8- ஜூன் 26 ஆம் தேதி யன்று செம்மொழி பூங்கா ஒப்பந்தம் நிறைவுக்குப்பின், கோவையில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என நகராட்சி நிர்வாக இயக் குநர் பொன்னையா தெரி வித்துள்ளார். கோவை மாநகராட்சி யில் உள்ள பல்வேறு பகுதி களில் நகராட்சி நிர்வாக  இயக்குநர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டு புதிதாக அமைக்கப் பட்ட சாலைகளின் தரத்தை  ஆய்வு செய்தார்.  அப்போது அவர் செய்தியாளர்களிடம்  பேசுகையில், இரண்டு வருட நிதியை  வைத்து, 563 சாலை பணிகளுக்கு ஒப்புதல்  அளித்துள்ளோம். 86 கிலோ மீட்டர்  சாலைகள் முழுமையாக நிறைவு பெற் றுள்ளது. மற்றவைகள் பல்வேறு நிலைகளில்  உள்ளன. பழுதடைந்த சாலைகள் செப்டம்பர்  மாதத்திற்குள் சரி செய்யப்படும். கோவை  மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும்  பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவ டைந்த நிலையில், சாலைகள் அமைக்கப் பட்டு வருகிறது. சூலூர் பகுதிகளில் தரமற்ற  முறையில் அமைக்கப்பட்ட சாலைகள்  குறித்த தகவல்கள் வைத்து விசாரணை மேற் கொள்ளப்படும். ஜூன் 26 ஆம் தேதி செம் மொழிப் பூங்கா ஒப்பந்தம் போடப்படுகிறது.  அதற்குப்பின் பணிகள் தொடங்கப்படும், என்றார். முன்னதாக, இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநக ராட்சி ஆணையர் மு.பிரதாப், மேயர் கல்பனா  ஆனந்த்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந் தனர்.