districts

img

திருமுருகன்பூண்டி நகராட்சியில் உரிய ஏற்பாடுகள் இல்லாமல் நகரசபை

அவிநாசி, நவ.2 - அவிநாசி அருகே திருமுருகன் பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு  பகுதியில் உரிய முன்னேற்பாடுகள் இன்றி, குளறுபடியுடன் நகரசபைக் கூட்டங்கள நடத்தி முடிக்கப்பட்டது. தமிழக அரசு,மாநகராட்சி, நக ராட்சி உள்ளிட்டு வார்டு பகுதிகளில்  நகரசபை கூட்டம் நவம்பர் 1ஆம் தேதி  நடத்த முடிவு செய்தது. அதன்படி  திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27  வார்டுகள் உள்ளன.இந்நிலையில்  நவம்பர் 1 தேதி நடைபெற்ற நகரசபை  கூட்டம் இந்த நகரமன்ற துணைத் தலைவரின் 20ஆவது வார்டுக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில்  நடைபெற்றது. அதே இடத்தில்19ஆவது வார்டு    நகரசபை கூட்டமும் நடைபெற்றது.  தனித்தனி வார்டு பகுதியில் நடத்தா மல் இரண்டு வார்டுக்கும் ஒரே இடத்தில் நகரசபை கூட்டம் நடத்திய தால் பொதுமக்கள்  குழப்பம் அடைந் தனர். இக்கூட்டங்களில் சுமார் நூறு பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஆனால் குறிப்பிட்ட வார்டு பகுதியில்  200 முதல் 300க்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் உள்ளன. 1500 வாக்காளர் கள் கொண்ட பகுதியாகவும் உள் ளது. பெரும்பாலான மக்களுக்கு  எங்கு நகரசபை கூட்டம் நடைபெறுகி றது என்பது தெரியவில்லை. நகரசபை நடைபெறும் இடங்கள்  குறித்து பொதுமக்களுக்கு நோட் டீஸ் விநியோகம் செய்யப்பட வில்லை, ஒலிபெருக்கி மூலம் பிரச் சாரம் மேற்கொள்ளவில்லை.  இது குறித்து பொதுமக்கள் கூறு கையில், அடிப்படை குறைகளை கேட்டறியவே, அதைத் தீர்க்கவே நகரசபை கூட்டம் ஆனால் திரு முருகன் பூண்டி நகராட்சி நிர்வா கம் ஏற்பாடு செய்த கூட்டம் கட மைக்கு நடத்தப்பட்டது போல இக் கூட்டத்தை நடத்தி வருகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சி யர் கவனம் செலுத்தி நகராட்சி வார்டு  பகுதியில் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட இடத்தில் நகரசபை கூட் டம் நடைபெறும் என்று ஒலிபெருக்கி  மூலமாக தெரிவிக்க வேண்டும்.  முறையாக நடத்தி அதிகளவில் மக் கள் பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினர்.