கோவை, மே 4- காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கி ரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை மாநக ராட்சி அதிகாரிகள் அகற்றினர். கோவை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற் றும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரு கிறது. இந்நிலையில், காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் உள் புறமும், வெளி புறமும், ஆக்கிரமிப்பில் இருந்த பல்வேறு கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும் கடைகள் செயல்பட்டு வந்ததை தொடர்ந்து, வியாழனன்று மாநகராட்சி அதி காரிகள், போலீசாரின் உதவியுடன் ஆக்கி ரமிப்பு கடைகளை அகற்றினர்.