கோவை, ஆக.22- கோவையில் நடைபெற்ற ‘காவல் வனம்’ துவக்க விழாவில், மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய் தார். கோவை மாநகர பி.ஆர்.எஸ் மைதா னத்தில் ‘காவல் வனம்’ என்ற பெயரில் மரம் நடும் விழா நடைபெற்றது. கோவை மாநகர காவல்துறை மற்றும் சிறுதுளி என்ற தனியார் அமைப்பும் சேர்ந்து நடத்திய இவ்விழாவை கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இங்கு சுமார் 750 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொ டர்ந்து வி.பாலகிருஷ்ணன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், இந்த வனத் தில் பல்வேறு வகையான 750 மரக்கன்று கள் நடப்பட்டுள்ளது. இம்மரங்களை பராமரிக்க சிறுதுளி அமைப்பு உதவு கிறது. ஏற்கனவே 1500 மரங்கள் இவ்வ ளாகத்தில் இருக்கின்ற நிலையில், அதோடு சேர்த்து இம்மரங்களும் சுற்றுப் புற சூழலை மேம்படுத்த உதவும். துடியலூர் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் புதனன்று (இன்று) முதல் கோவை மாநகர காவல் துறையுடன் சேர்க்கப்பட உள்ளது. அக்காவல் நிலை யங்களுக்கு கூடுதல் போலீசாரை கொண்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்சனை களை ஒழுங்குபடுத்தவும், போக்கு வரத்தை சீர் படுத்துவதற்கும் உதவி யாக இருக்கும். மாநகரப் பகுதிகளில் அதிவேகமாக சென்ற சுமார் 500 வாக னங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள் ளது. வேகத்தை கண்டறியும் சென்சார் கருவிகள் பிற இடங்களிலும் விரிவு படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் படும், என்றார்.