ஈரோடு, ஜன.2- கொரோனா சிகிச்சைக்காக பணியமர்த்தப்பட்ட செவி லியர்களை பணி பாதுகாப்புடன், நிரந்தர தன்மையுடைய பணியிடத்தில் பணியமர்த்த கோரி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலகட்டத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் எழுதி காத்திருந்த செவிலியர்கள் கொரோனா சிகிச்சைக்காக பணியமர்த்தப்பட்டனர். இரண்டரை ஆண்டு கள் பணியாற்றிய செவிலியர்கள் கடந்த 31 ஆம் தேதி முதல் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலை யங்களில் 2500க்கும் மேலான காலியிடங்கள் உள்ளன. ஆனால் நிரந்தர தன்மையற்ற செவிலியர்களாக பணி யாற்றவே அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, எம்ஆர்பி செவிலியர்களை நிரந்தர தன்மை யுடை செவிலியர்களாக பணியமர்த்த வலியுறுத்தி நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயசுகி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொது செயலாளர் சீனிவாசன் தொடக்க உரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில தலைவர் சசிகலா உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் சிறப்புரையாற்றி னார். வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகி முத்துக் குமார், பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் அலுவலர் சங்க விசு.சரவணமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.