districts

img

எம்.பி. நிதி ரூ.17.42 லட்சத்தில் வளர்ச்சிப் பணி இடுவாயில் பி.ஆர்.நடராஜன் பார்வையிட்டார்

திருப்பூர், மே 3 - திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சி சீராணம்பாளையத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் தொகுதி வளர்ச்சி நிதி யில் ரூ.17 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட் டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக்  கட்டடத்தை பி.ஆர்.நடராஜன் எம்.பி. செவ்வாயன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியின்போது அவரோடு  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செய லாளர்  செ.முத்துக்கண்ணன், தெற்கு  ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி,  இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே. கணேசன், கே.ஈஸ்வரன், கே.கருப்பு சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்பு இடுவாய் பேருந்து நிலையம், பார திபுரம் பிரிவு இரு இடங்களிலும் கோவை எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதி யில் உயர் கோபுரம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உயர் கோபுரம்  மின்விளக்கு அமைத்ததற்கான கல் வெட்டை இரு இடத்திலும் எம்.பி. பி. ஆர்.நடராஜன் திறந்து வைத்தார். இந்நி கழ்வுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கே. கணேசன் தலைமை வகித்தார். ஊராட்சி  மன்ற உப தலைவர்  பரமசிவம் முன்னி லையில் இடுவாய் ஊராட்சி மன்ற உறுப் பினர்கள் ஆர்.ஈஸ்வரி, பி.ஈஸ்வரி, பி. பூவதி பிரகாஷ், கே.எஸ்.சுப்பிரமணி, ஒன்பதாவது வார்டு முன்னாள் உறுப்பி னர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.  மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் இடு வாய் ஊராட்சி கட்சி கிளை செயலாளர் கள் கே.கருப்பசாமி, எஸ்.சுந்தரம், பி. ரத்தினசாமி, மாதர் சங்க நிர்வாகிகள் அங்குலட்சுமி, இந்திராணி, வாலிபர் சங்க நிர்வாகிகள் க.சிந்தன், எம்.கௌதம், எல்.சுர்ஜித், எஸ்.நேதாஜி உள் ளிட்டோரும், கட்சியின் முன்னணி ஊழி யர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். இடுவாய் ஊராட் சியில் உயர் கோபுர மின் விளக்கு, பல்நோக்கு மையக் கட்டிடம் ஆகிய வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கிய கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜனுக்கு ஊராட்சி மக்கள் சார்பில் நன்றி தெரி விப்பதாக ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் கூறினார்.