அவிநாசி,மார்ச் 10- அவிநாசி அருகே கோவை செல்லும் சாலையில் உள்ள நீரோடையில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட கோவை தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனை அரு காமையில் நீரோடை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓடை யில் பேரூராட்சி நிர்வாகம் மக்களிடம் சேகரிக்கும் குப்பை களை, கொட்டி வருகிறது. மேலும், இரவு நேரங்களில் தனி யார் தொழிற்சாலை நிறுவனங்களின் கழிவுகளும், டாஸ் மாக் மதுபானக் கூடங்களில் பயன்படுத்தும் நெகிழி டம்ளர் உள்ளிட்டவைகளும் இங்கு கெட்டப்படுகிறது. இந்நிலையில் கெட்டப்படும் குப்பைகளில் இரவு நேரங்க ளில் சில மர்ம நபர்கள் தீ வைத்து விடுவதால், சாலைகளை புகை சூழ்ந்து இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு மூச் சுத் திணறல் ஏற்படுகிறது. எனவே, இதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர் வலர்கள், வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.