பென்னாகரம், மே 11- ஒகேனக்கல் மலைப்பா தையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள தீர்த்தகிரி நகரைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் அண் மையில் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் சடங்குகள் செய்வதற்காக வியாழனன்று அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என 67 பேர் பேருந்தில் ஒகேனக்கல் சென்று கொண்டிருந்தனர். பென்னாகரத்தை கடந்து ஒகேனக்கல் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, சாலை வளைவு ஒன்றில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையிலேயே கவிழ்ந் தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நல் வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒகேனக்கல் போலீசார் மற் றும் அப்பகுதி பொதுமக்கள், விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து ஒகேனக்கல் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதேபோன்று தருமபுரி மாவட்டம், நாகர் கூடல் அரசு பள்ளிக்கூடம் அருகே ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து வளைவான திருப்பத் தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இவ்விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர். சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்தின் ஓட்டுநர் வளைவான திருப்பத் தில் திருப்ப முயன்ற போது பேருந்து கட் டுபாட்டை இழந்து விபத்து நடந்ததாக கூறப் படுகிறது.