தருமபுரியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள்
தருமபுரி, ஜன.30- தருமபுரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக வனத்துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 2024 ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட வனத்துறையின் சார்பாக ஜனவரி 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் பறவை கள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது. அவ்வாறு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், தருமபுரி வனக்கோட் டத்தில், தருமபுரி, பாலக்கோடு பென்னாகரம். ஒகேனக் கல், தீர்த்தமலை, அரூர், மொரப்பூர் மற்றும் கோட்டப்பட்டி ஆகிய 8 வனச்சரகங்களில் 27 ஈர நிலங்களை அடையா ளம் கண்டு, தேர்வு செய்து கணக்கெடுப்பு பணி நடத்தப் பட்டது. இதில், 109க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறி யப்பட்டுள்ளது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த கணக்கெ டுப்பில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதி கமாக பறவைகள் காணப்பட்டது. அதிலும், அழிந்து வரு கின்ற இனமான சிட்டுக்குருவிகள் மற்றும் சாம்பல் நிற காட்டுக்கோழி ஆகியவை கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிளி, மயில், கொக்கு, இரட்டை வால் குருவி, நீர் காகம், கழுகு, காகம், தூக்கனாங்குருவி, மீன் கொத்தி பறவை மற்றும் மைனா என தோராயமாக 20,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக தருமபுரி மாவட்ட வனபாதுகாப்பு அலுவலர் கே.வி.அப்பாலநாயுடு, தெரி வித்துள்ளார்.
சென்னை – மும்பை: நிற்காமல் சென்று இளைஞர் சாதனை
சேலம், ஜன 30- சென்னையில் இருந்து மும்பை வரை சுமார் 17 மணி நேரம் நிற்காமல் சென்று, சேலத்தை சேர்ந்த இளைஞர் சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் உள்ள காந்தி மைதானத்தை சேர்ந்தவர் விவேகானந்தன். எலக்ட் ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிசிஏ பட்ட தாரியான பூபதி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்த நிலையில், புதிதாக ”பூ டெக்” எனும் யூடியூப் சேனலை துவங்கி பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். கடந்த நான்கு வருடங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைப்பர்களை கொண்டு பணம் சம்பா தித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் இருந்து மும்பை வரை சுமார் 1,343 கிலோமீட்டர் தூரம், நிற்காமல் இருசக் கர வாகனத்தில் சென்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை, இந்திய புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும், 1343 கிலோமீட்டர் தூரம் ஹெல்மெட் அணிந்து, 76 - 80 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்த சாதனையை புரிந்ததாக கூறி னார்.
வேலை பளுவால் அமேசான் நிறுவன கிளை மேலாளர் தூக்கிட்டு தற்கொலை
சேலம், ஜன.30- வேலை பளு மற்றும் உரிமையாளரின் துன்புறுத்தலால் அமேசான் நிறுவன கிளை மேலாளர், அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் ராகுல் (27). பட்டதாரியான இவர், கூட்ரோடு பகுதியில் உள்ள அமேசான் நிறுவன கிளை மேலாளராக உள்ளார். கிளை மேலாளராக, கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ராகுல் தனது நண்பர்களுக்கு ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், என்னால் வேலை செய்ய முடியவில்லை. அலுவலகத்தில் மனரீதியான துன்புறுத்துகின்றனர். மேலும், கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என வற்புறுத்துகின்றனர். எனவே, என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். எனது இறப்பிற்கு உரிமை யாளர் சிவா என்பவரும், நாமக்கல்லைச் சேர்ந்த ஸ்மார்ட் பே ஓனர் சதீஷ் உள்ளிட்ட மூவருமே காரணம் என பதிவிட் டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அலுவ லகத்தில் சென்று பார்த்த போது, ராகுல் தூக்கில் தொங்கி யபடி இருந்துள்ளார். உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும தித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராகுல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார் ராகுலின் உடலை கைப் பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலை செய்த தற்கான காரணம் என்ன? என்பது குறித்தும், ராகுலின் ஆடி யோ பதிவை வைத்தும் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். ராகுல் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.
வால்பாறை வியாபாரிகள் வலியுறுத்தல்
கோவை,ஜன.30- பழுதடைந்த கடைகளை சீரமைத்து தர வேண்டும் என வால்பாறை நகராட்சியிடம் வியாபாரிகள் வலியுறுத்தியுள் ளனர். கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சிக்கு சொந்த மான 14 கடைகள் சிறு வணிகர்களுக்கு வாடகைக்கு விடப்பட் டுள்ளது. இந்தக் கடைகள் மிகவும் பழுதடைந்துள்ளது. இது குறித்து, சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஒவ்வொரு முறையும், சீரமைப்பு பணி யில் தொடக்கப் போகிறோம் எனக் கூறுவதோடு நின்றுவி டுகின்றனர். இந்நிலையில், அனைவரும் வெளியேற்றிவிட்டு நான்கு நாட்களில் சீரமைப்பு பணிகள் முடித்து உங்களி டம் ஒப்படைக்கிறோம் என கூறி நான்கு நாட்கள் கழித்தும் இன்னும் பணிகளை தொடங்காமல் உள்ளதாக வியாபாரி கள் குற்றம்சாட்டுகின்றனர். திட்டமிட்டே நகராட்சி நாட்களை கடத்துவதாகவும், இந்தக் கடைகளை நம்பியே எங்களின் வாழ்வாதாரம் உள்ளது ஆகையால் வால்பாறை நகராட்சி நிர் வாகம் உடனடியாக இதில் தலையிட்டு கடைகளை சீர மைத்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மகன் மீது திருட்டு வழக்கு தாய் தீக்குளிக்க முயற்சி
ஈரோடு, ஜன. 30- ஈரோடு, கருங்கல்பாளையம், ஜெகன் வீதியை சேர்ந்த வர் ராஜேந்திரன் மனைவி மகாலட்சுமி (43). இவர் திங்களன்று மாலை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். நுழைவு வாயிலைக் கடந்து சில மீட்டர் வந்ததும், தான் மறைத்து வைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனைத் திறந்து, தன் மீது ஊற்றிக் கொண்டார். பின்னர் கொண்டு வந்த தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க முயன் றார். இதனைப்பார்த்தவர் கூச்சலிட பாதுகாப்பு பணியிலி ருந்த காவல்துறையினர் அவரது கையில் இருந்த தீப்பெட்டி யைப் பறித்து பாதுகாத்தனர். இதுகுறித்த போலீசார் விசாரணையில், மகாலட்சுமியின் மகன் பேரறிவாளன் மீது, மொடக்குறிச்சி காவல் நிலையத் தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைக் கைது செய்ய காவல்துறையினர் முயன்று வருகின்றனர். இந் நிலையில், தனது மகன் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடு படுபவர் அல்ல. ஆகவே, தனது மகன் மீது வழக்கு பதிவு செய்ததையும், கைது செய்ய முயல்வதையும் கைவிட வேண் டும் என தெரிவித்துள்ளார்.
தர்ப்பூசணி விற்பனை அமோகம்
கோவை, ஜன.30- கோடை காலம் துவங்க உள்ள நிலையில் இப்போது இருந்தே வெயிலின் தாக் கம் அதிகரிக்க துவங்கியுள் ளது. இதனால் பொதுமக்கள் பலரும் உடலுக்கு குளிர்ச்சி யூட்டும் உணவுகளை உட் கொள்ள துவங்கிவிட்டனர். கம்பங்கூழ், நீர்மோர், இள நீர், பழச்சாறு ஆகிய வற்றை அதிகளவு அருந்த துவங்கிவிட்டனர். இந்நிலையில் வெயில் காலத்தில் அதிகமானோர் விரும்பி சாப்பிடும் தர்பூசணி விற்பனை கோவையில் துவங்கி உள்ளது. இந்த பழத்தில் நீர் சத்துக்கள் அதிகம் உள்ளதால் சிறுவர் கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட் கொள்வர். கோவையின் பல்வேறு இடங்களில் சாலை யோரங்களில் தர்ப்பூசணி பழக்கடைகள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு தர்பூசணி பழச்சாறும் போடடும். இத னால் பலரும் தர்பூசணி பழங் களை தர்பூசணி பழச்சாற்றை யும் விரும்பி உட்கொள்கின்ற னர். இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிக ரிக்க கூடும் என்பதால் இறக் குமதியை அதிகரிக்க வியா பாரிகள் முடிவெடுத்துள்ள னர்.
விபத்தில் பெண் பலி
விபத்தில் பெண் பலி கோபி, ஜன. 30- கோபி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி உர சியதில் கீழே விழுந்த மனைவி மீது சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதுகொத்துக்காடு பகுதியை சேரந்தவர் சாமிநா தன். இவரது மனைவி ஈஸ்வரி. கணவன் மனைவி இருவ ரும் கட்டிட வேலைக்கு இருசக்கர வாகனத்தில் காசிபா ளையம் வாய்க்கால்மேடு பகுதியில் சென்று கொண்டி ருந்தனர். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி இரு சக்கர வாகனம் மீது உரசியது. சாமிநாதனின் மனைவி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் டிப்பர் லாரியின் பின் சக்கரம் ஈஸ்வரியின் தலை மீது ஏறியது. இதனால் ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதில் காயம் அடைந்த சாமிநாதனை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும், உயிரிழந்த ஈஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாயை பராமரிக்க உத்தரவிட குறைதீர் கூட்டத்தில் மனு
ஈரோடு, ஜன. 30- தாயை பராமரிக்க மகனுக்கு உத்தரவிடக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று மகளுடன் தாய் மனு அளித்த சம்ப வம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே அம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவரது மனைவி சிவகாமி (71). ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியரான இவருக்கு கோமதி, தேன்மொழி ஆகிய இரண்டு மகள்களும், சோமசுந்தரம் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவர் சச்சிதானந்தம் உயிரோடு இருக்கும் போது, தனக்கு சொந்தமான வீட்டை மகன் சோம சுந்தரம் பெயருக்கு கிரையம் செய்து கொடுத் துவிட்டார். சோமசுந்தரம் அறச்சலூரில் வசித்து வருகிறார். மகள்களுக்கு திரும ணமாகிவிட்டதால் தனித்தனியாக வசித்து வருகின்றனர். கணவர் இறந்துவிட்ட நிலையில் தனி யாக வாடகை வீட்டில் வசித்து வந்த சிவகா மிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால், மகன் சோமசுந்தரம் தனது தாயை பராம ரிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நி லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவ காமி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப் போதும் மகன் சோமசுந்தரம் தாயாரை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து மகள்கள் தேன்மொழி, கோமதி மற்றும் உறவினர்கள் மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த சிவகாமியை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். சகோதரன் சோமசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
நெடுஞ்சாலைத்துறை பொறியாளரின் ஊழியர் விரோத போக்கு
ஈரோடு, ஜன. 30- ஊழியர் விரோத போக்கை கடைப்பி டிக்கும் நெடுஞ்சாலைத்துறை கோபி கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் கோபி உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோபி கோட்டம் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத்தில் அரசு விதிகளை மதிக்காமல், ஊழியர் விரோத போக்கு கடைபிடிக்கும் கோட்ட பொறியாளர் ஈடுபடுகிறார். கடந்த 9.5.2023 பேச்சுவார்த்தையில் ஏற்று கொண்ட கோரிக்கைகளை நாளது வரையில் நிறை வேற்றப்படவில்லை. அமைச்சர், தலைமை பொறியாளர் கூறியதாக சொல்லி அரசு விதி களைப் புறந்தள்ளி சாலைப் பணியாளர்க ளின் ஊதியத்தை பிடித்தம் செய்து, இதுவரை ஊதியத்தை வழங்கவில்லை. சாலைப் பணி யாளர்களின் ஒட்டுமொத்த முதுநிலை பட்டி யல் தமிழ்நாடு சார்நிலை பணியமைப்பு விதி 35, 35 A, மற்றும் 41 (1) OF TNGS (CS) ACT 2016 அரசு விதிகளை பின்பற்றாமல் பல ஆண்டு களாக சாலைப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் காலம் கடத்தி வருகி றார். சாலைப் பணியாளர்களுக்கு கருவி தளவாடங்கள், மழை கோட், உபகரணங் கள் உடனடியாக வழங்க வேண்டும். நம்பி யூர் உட்கோட்டத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளர்களுக்கு மாநகர ஈட்டுப் படி வழங் கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கோபி உட்கோட்ட தலைவர் மா. பழனிவேலு தலைமை வகித்தார். மாநில செயலாளர் சு.செந்தில்நாதன், சிறப்புரை யாற்றினார். கோட்ட செயலாளர் இரா.கருப்பு சாமி, உட்கோட்ட செயலாளர் பெ.கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல நம்பியூரில் உட்கோட்ட தலைவர் குரு சாமி, சத்தியில் உட்கோட்ட தலைவர் கே.முரு கன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மைவி3 ஏட்ஸ் நிறுவன உரிமையாளர் மீது வழக்கு
கோவை, ஜன. 30- மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மீது 3 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவையை தலைமையிடமாக கொண்டு Myv3 Ads என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூ டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலி யின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலம், புதிய நபர்களை சேர்ப்ப தன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக் களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறு வனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள புறவழிச்சாலையில் திங்களன்று ஆயிரத்துக்கும் மேற் பட்ட முதலீட்டாளர்கள் குவிந்து அந்நிறுவனம் எந்த மோச டியும் செய்யவில்லை எனவும், தவறான புகார் கொடுக்கப் பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்ப குதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சக்தி ஆனந்த் மீது போக் குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது இடத்தில் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி அளித்த புகாரின் அடிப்படையில் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மீது சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிப்.2 உள்ளூர் விடுமுறை
அவிநாசி, ஜன.30- அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வரும் பிப்.2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டத்திலுள்ள அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு, நன்னீராட்டுப் பெரு விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறு வனங்களுக்கும் 2.2.2024 (வெள்ளிக் கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்திரவிடப்படு கிறது. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளுக்குப் பதிலாக 3.2.2024 அன்று சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. அரசு அவசர அலுவல்களைக் கவனிக் கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலம், மற் றும் சார்நிலைக் கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்க ளோடு செயல்படும் என தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகளில் பெண் பணியாளர் பாதுகாப்புக்கு ஆட்சியர் ஆலோசனை
திருப்பூர், ஜன. 30 - தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண் பணியா ளர் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு தன்னார்வ நிறுவனங் களைச் சேர்ந்தோருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத் தினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திங்களன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமை ஏற்றார். இக்கூட்டத்தில் சகி தன்னார்வ தொண்டு நிறுவன துணைத் தலைவர் ஹாணம் ஜெயின், சேவ் தன்னார்வ அமைப் பின் நிர்வாகி ஆ.அலோசியஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி உள்பட அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். தொழிற்சாலைகளில் ஹெல்ப் டெஸ்க், உள்ளக புகார் குழு மற்றும் காலாண்டு பயிற்சி அளிப்பது பற்றி ஆட்சியர் அறிவு றுத்தினார். எனினும் திருப்பூர் பின்னலாடை தொழில் நகரமாக இருக்கும் நிலையில் 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண் கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பிரச்சனை, பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்த தாக இருந்தாலும், பிரதான தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவன அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைக்கா மல், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோரை மட்டும் அழைத்துப் பேசியது ஆக்கப்பூர்வ பயனளிக்காது. இது சம்பிரதாயத்துக்கு நடத்தப்பட்ட கூட்டமாகவே இருக்கும் என்று தொழிற்சங்கத்தினர் விமர்சித்தனர்.
பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு நாளை பேச்சுப் போட்டி
திருப்பூர், ஜன. 30 - திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நாராயணகவி, சு. அவி னாசிலிங்கம் மற்றும் க.பழனிச்சாமி ஆகியோரின் இலக்கியப் பணி, தமிழ்த்தொண்டு, தமிழ்மொழிக்கான பங்களிப்பினை நினைவுகூரும் வகையில் பிப்ரவரி 6ஆம் தேதி உள்ளூர் தமிழ றிஞர்கள் மற்றும் இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து முதல் இலக்கியக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடத்தப்படுகிறது. இந்த இலக்கியக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள இலக் கிய அமைப்புகளைச் சேர்ந்தோர், தமிழறிஞர்கள், எழுத்தா ளர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொள்ளலாம். இக்கூட்டத்துக்கு முன்னதாக வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வியாழனன்று காலை 10 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்க ளிடையே பேச்சுப் போட்டிகள் நடைபெறும். உடுமலை நாரா யண கவியின் திரைப்பாடல்கள், உடுமலை நாராயணகவி யின் கவித்திறன், கல்விக்கடல் அவினாசிலிங்கனார், அவினா சிலிங்கனாரின் சமுதாயப்பணி ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கு உடுமலை நாராயண கவியின் முற்போக்கு சிந்தனைகள், உடுமலை நாராயண கவியின் பாட்டும், பொரு ளும், அரசியலில் அவினாசிலிங்கனாரின் பங்கு, பெண் முன் னேற்றத்தில் அவினாசிலிங்கனாரின் பங்கு ஆகிய தலைப்பு களில் பேச்சுப் போட்டி நடைபெறும். இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பிப்ரவரி 6ஆம் தேதி நடை பெறும் இலக்கியக் கூட்டத்தில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2ஆம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட் டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.