districts

img

மக்கள் வசதிக்கு ஏற்ப பாலம் வடிவமைப்பை திருத்தம் செய்க!

அவிநாசி, அக்.20 – வஞ்சிபாளையம் - திருப்பூர்  சாலையில் கட்டப்பட்டு வரும் பாலத்தை மக்களின் கருத்துக் களைக் கேட்டு, அவர்களின் வச திக்கு ஏற்ப வடிவமைப்பில் திருத் தம் செய்து கட்ட வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரி களிடம் வலியுறுத்தினார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கணியாம்பூண்டி ஊராட் சிக்குட்பட்ட வஞ்சிபாளையம் பகு தியில் இருந்து திருப்பூர் செல்லும்  சாலையில் புதிதாக பாலம் அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த பாலத்தின் அருகில் 500க்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். அவர்கள் செல்வதற்கு போதிய வழித்தடம் இன்றி அவதிப்பட்டு வரு கின்றனர். அத்துடன் இந்த பாலம் இணைப்பு சாலை அமைக்க முடியா தபடி மிகவும் உயரமாகவும், வடிகால் இல்லாமலும் கட்டப்பட்டு வருகி றது. இதனால் வாகன ஓட்டிகள்  பாதிக்கப்படுவதுடன், அருகில் உள்ள ரயில்வே இருப்புப் பாதை பகுதியில் தண்ணீர் தேங்கி ரயில்  போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்ப டுத்தக்கூடிய ஆபத்து உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய  கவுன்சிலர் பி.முத்துசாமி மாவட்ட நிர் வாகம், ஊராட்சி ஒன்றியக்குழு கூட் டம் ஆகிய இடங்களிலும் இப்பிரச் சனை குறித்துப் பேசியுள்ளார். எனி னும் எவ்வித மாற்றமும் இல்லாமல்  நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் இப் பணியைத் தொடர்ந்தது.

 இதைக் கண்டித்து புதுப்பாளை யம் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பாலத்தின் வடிவமைப்பில் திருத் தம் செய்து, பொதுமக்களுக்கு ஏது வாக கட்டுமானப் பணி செய்ய வேண் டும் என வலியுறுத்தினர். இதைய டுத்து பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட் டது. ஆனால் மாற்று ஏற்பாடு செய்யப் படவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற  உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வியா ழக்கிழமை, இந்த பாலம் கட்டப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார். இதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலை துறை  அலுவலர்களை சந்தித்து பாலத்தை  ஆய்வு செய்யும்படி கூறினார்.  இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு,  உரிய அளவில் பாலம் கட்டப்படும்  என கூறினர். இருப்பினும் பி.ஆர். நடராஜன் எம்.பி., பொதுமக்களின் கருத்தைக் கேட்டபிறகு இப்பாலத் தைக் கட்ட வேண்டும் என அறிவு றுத்தினார்.  மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய கவுன்சி லர் பி.முத்துசாமி, புதுப்பாளையம்  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குமர வேல், பாலசுப்பிரமணியம், தேவிகா,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி ஒன்றி யக்குழு உறுப்பினர்கள்  முருகன்,  மோகனசுந்தரம், கிளைச் செயலாளர்  ராமகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி  மன்ற தலைவர் சாமியப்பன், கணி யாம்பூண்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாச்சிமுத்து உட்பட முக் கிய நிர்வாகிகள் பலர் கலந்து  கொண்டனர்.