districts

img

உணவளிக்கும் விவசாயியை புகை குண்டு போட்டு அச்சுறுத்தும் மோடி அரசு

கோவை, பிப். 19- தலைநகர் டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக  கோவை ரயில் நிலையத்தை முற்று கையிட்டு அனைத்துக் கட்சி, இயக் கங்கள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விளைபொருட்களுக்கு குறைந் தபட்ச ஆதார விலை, ஒன்றிய மோடி அரசு அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலை நகர் டில்லியில் பல்வேறு மாநி லத்தை சேர்ந்த விவசாயிகள் ஒன் றுபட்டு போராடி வருகின்றனர்.  விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய மோடி அரசு, கார்ப்ரேட்டு களுக்கு சேவகம் செய்வதே பிரதா னம் என விவசாயிகளின் கோரிக் கையை ஏற்க மறுக்கிறது. மேலும், விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு முனைகளில் இருந்து தாக்குதல் தொடுக்கிறது. டிரோன் புகை குண்டு, சாலையில்  ஆணி அடிப்பது, கண்ணீர் புகை குண்டு வீசுவது உள்ளிட்ட மூர்க்கத்த னமான நடவடிக்கைகளை விவசாயி களின் மீது ஏவி விடுகிறது.  ஒன்றிய மோடி அரசின் இத்த கைய மோசமான நடவடிக்கைக ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இதன்ஒருபகுதியாக, கோவையில் அனைத்து முற் போக்கு இயக்கங்கள் சார்பில் தபெ திக பொதுச்செயலாளர் கு.ராமகி ருட்டிணன் தலைமையில் ரயில் மறி யல் போராட்டம் நடைபெற்றது. இதில், திராவிடர் தமிழர் கட்சி யின் தலைவர் வெண்மணி, அகில  இந்திய வழக்கறிஞர் சங்க மாவட் டச் செயலாளர் ஜோதிக்குமார், புரட்சி கர இளைஞர் முன்னனி மலரவன் மற்றும் நேருதாஸ் உள்ளிட்ட தலை வர்கள் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக, ரயில் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த போலிசா ரின் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றதால் போராட்ட காரர் களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடு பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.