districts

இதுவரை இல்லாத கொடூரமானது மோடியின் ஆட்சி

ஈரோடு, பிப்.16- மத்தியில் இதுவரை இல்லாத  கொடூர ஆட்சி மோடியின் ஆட்சி என  தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற  தொகுதியில் மதசார்பற்ற முற் ்போக்கு கூட்டணி சார்பில் போட்டி யிடும் காங்கிரஸ் வேட்பாளர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை  ஆதரித்து அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப் பினருமான தொல்.திருமா வளவன் வியாழனன்று பிரச்சாரம்  செய்தார். அப்போது  அவர் பேசிய தாவது, மோடி தலைமையிலான  ஒன்றிய அரசானது தமிழ்நாட் டையும், மக்களையும் புறக் கணித்து வருகின்றது. தமிழ் நாட்டிற்கு தேவையான நிதியை ஒதுக்குவது கிடையாது. ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்பட்ட நிதி திரும்ப  வழங்கப்படாமல் உள்ளது.  அதானி, அம்பானி போன்ற கார்ப்ப ரேட் நிறுவனங்களை ஊக்கப் படுத்தும் வகையிலான திட்டங்கள்  தான் பட்ஜெட்டில் உள்ளது. விவ சாயிகளையும், தொழிலாளர்களை யும் ஒடுக்கும் வகையிலான திட்டங் களை கொண்டு வருகின்றது.  பெட்ரோல், டீசல், கேஸ் விலை  உயர்வால் கூலி தொழிலாளர்கள்  கடுமையாக பாதிக்கப்படு கின்றனர். இந்தியாவில் இதுவரை  இல்லாத அளவுக்கு கொடூர ஆட்சி யாக மோடி ஆட்சி உள்ளது. இந்த  ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். இதற்காக தமிழ்நாட்டில் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி போல நாடு முழுவதும் ஒரு வலுவான கூட்டணி அமைய வேண்டியது அவசியமாகும். ஜெய லலிதா மறைவிற்கு பிறகு அதிமுக  என்ற கட்சி பல அணிகளாக பிரிந்து  அப்படி ஒரு கட்சி இருப்பதே தெரி யாத நிலைக்கு போய்விட்டது என் றார். 

அதிமுக ஆறு மாதத்தில் பாஜகவாக மாறிவிடும்

திமுக செய்தி தொடர்பாளர்  தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற  கோவை செல்வராஜ் செய்தியாளர் ்களிடம் கூறுகையில், எதிர்க்கட்சி  தலைவராக இருக்கும் முன்னாள்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பேசுகிறபோது, இன்றைய  முதல்வர் தளபதியை தாறு மாறாகத் தவறாகப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  நாங்கள் எங்கள் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கிறோம். பெண்கள் இந்த ஆட்சியை வரவேற் கிறார்கள். 6 மாத காலத்தில்  பாஜகவோடு, அதிமுகவை இணைத்து விடுவார்கள். அந்த  நிபந்தனையுடன் தான் இரட்டை  இலை சின்னத்தையும், கட்சி  பெயரையும் கொடுத்துள்ளார்கள்.  நாடாளுமன்ற தேர்தலில் 50 சதம்  பாஜகவிற்கு என்று ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். அதிமுகவை, பாஜகவோடு இணைத்து விட்டு  அந்த கட்சிக்கு எடப்பாடி தலைவ ராக செயல்படுவார் என்று ்சாடினார்.  இவர், அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்து, பின்னர் அதிருப்தி காரணமாக விலகி திமுக வில் இணைந்தவர் என்பது குறிப்பி டத்தக்கது.