districts

img

ஈரோட்டில் நவீன நாடக ஓவியம்

ஈரோடு, மே 3- ஈரோடு நாடகக் கொட்டகையில் கண்ணேறு என்கிற நவீன நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஈரோடு நாடகக் கொட்டகை சார்பாக மே தினத்தன்று அரங் கேற்றப்பட்ட இந்த நாடகம் நவீன நாடக அமைப்பில் உரு வாக்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தை, தமுஎகசவின் ஈரோடு  மாவட்ட செயலாளர் இ.கலைக்கோவன் எழுதி, சதீஷ்குமார் இயக்கியுள்ளார். நாடகத்திற்கான இசையை கிருபாகரன் மற் றும் லட்சுமி நாராயணனும், ஒளி வடிவமைப்பை தீபன், ஓவி யம் செளமியா இயல். முகமூடி வடிவமைப்பு ஆழி.வெங்கடே சன் ஆகியோரின் பங்களிப்போடு நாடகம் அரங்கேற்றப் பட்டது.  இதுகுறித்து கலைக்கோவன் கூறுகையில், நவீன நாடக மும் நவீன ஓவியமும் பாமரர்களால் புரிந்து கொள்ள முடி யுமா?  என்றால், ஒரு கலை பாமரனுக்கும் செல்ல வேண்டும்  என்பதுதான் கலைஞனின் ஆர்வமாக இருக்கும். நவீன தளத் தில் ஒரு கலைஞன் தன்னை இணைத்துக் கொண்டால்தான் உலக தரத்தோடு போட்டி போட முடியும். பழைய மாவை  அரைப்பதில் பயனில்லை. அதன் அடிப்படையில் நிச்சயம் நம் எண்ணங்களையும், பார்வையையும் ரசிகர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அப்படி ஒரு ரசிகனை இந்த நவீன நாடகம் திருப்திப்படுத்தியதா  என்றால்,  நிச்சயம் திருப்திப்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும், என்றார்.