ஈரோடு, ஜன.18- தோழர் எம்.என்.காளியண்ணன் நினைவுதின பொதுக்கூட்டம் கீழ் வாணியில் வெள்ளியன்று நடைபெற் றது. ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தி லும், ஈரோடு மாவட்டம் பிரிந்த பின்ன ரும் பவானி மற்றும் அந்தியூர் வட்டா ரத்திலும் உழைப்பாளி மக்கள், விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களுக் காகவும் பல போராட்டங்களை முன் னின்று நடத்தியவர் தோழர் எம்.என். காளியண்ணன். இவர் 40 ஆண்டு களுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் இணைந்து களம் பல கண்ட வர். அவரது 100 ஆவது பிறந்த நாள் மற்றும் 29 ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம், கீழ்வாணியில் வெள்ளியன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு, ஆந்தியூர் தாலுகாச் செயலாளர் ஆர்.முருகே சன் தலைமை வகித்தார். தாலுகா கமிட்டி உறுப்பினர் எம்.தவமணி வர வேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன் சிறப்புரையாற்றி னார். இதில், கட்சியின் மூத்த தோழர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பி.பழனிசாமி, ஆர்.விஜயராகவன், எஸ்.வி.மாரி முத்து, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாணிக்கம், பவானி தாலுகாச் செயலாளர் ஆர்.பிரகாஷ், விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம். முனுசாமி, பவானி தாலுகா பொது தொழிலாளர் சங்கத் தலைவர் ஏ. ஜெகநாதன் மற்றும் அந்தியூர் பேரூ ராட்சியின் வார்டு உறுப்பினர் எஸ்.கீதா ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் அந்தியூர் மற் றும் பவானி தாலுகா கமிட்டிகள் நிதிய ளித்தன. முன்னதாக, தோழர் ஏ.எம். காதர் நினைவு விடியல் கலைக்குழு வினரின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இந்நிகழ்வில், திரளா னோர் பங்கேற்றனர்.