வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் தவறான கணக்கீடு மற்றும் முறைகேடுகளை கண்டித்து கோவையில் தமிழக வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் நல சங்கம் சார்பில், ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் சிவானந்த காலனியில் நடைபெற்றது. இப்போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற்றினார்.