districts

img

அரபி கல்லூரி முதல்வர் மறைவு சிறுபான்மை நலக்குழு இரங்கல்

ஈரோடு, டிச. 18- ஈரோடு தாவூதியா அரபிக் கல்லூரியின் முதல் வர் மவுலானா மவ்லவி எம்.எஸ்.உமர்ஃபாரூக் தாவூதி ஹழ்ரத் கிப்லா காலமா னார். இதுகுறித்து சிறு பான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணை தலைவர் ப.மாரிமுத்து விடுத்துள்ள அறிக்கையில், மவுலானா மவ்லவி எம்.எஸ்.உமர்ஃபாரூக் தாவூதி ஹழ்ரத் கிப்லா எளிமையும், இனிமையும் நிறைந்த பண்பாளர். சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் செயல்பாடுகளில் அக்கறையுள்ளவர். வயது  வித்தியாசமின்றி அனைவருடனும் சமமாக, அன்பாக பழகு பவர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் அவர் ஆற்றிய உரை  பொன் எழுத்துக்களால் வடிக்கப்பட வேண்டியது. அவரின்  மறைவு அனைவருக்கும் பேரிழப்பு என தெரிவிக்கப் பட்டுள்ளது.