திருப்பூர், டிச.29- திருப்பூர் மாவட்டத்தில், ரூ.22.65 கோடி மதிப்பிலான கடனு தவிகளை 554 மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த நபர் களுக்கு அமைச்சர்கள் வியாழனன்று வழங்கினர். மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில், மேயர் ந. தினேஷ்குமார் முன்னிலையில், திருப்பூர் தெற்கு வட்டம் கொடுவாய் ஆர்.வி.எல் திருமண மண்டபத்தில் 554 மக ளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த 8853 நபர்களுக்கு ரூ.22.65 கோடி மதிப்பிலான கடனுதவிகளை செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், திட்ட இயக்குநர் மதுமிதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.