districts

img

வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

திருப்பூர், நவ.1- மாநகராட்சி நடுநிலை பள்ளியில் உள் ளாட்சி தின விழாவை முன்னிட்டு  நடைபெற்ற  வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டத்தில்  செய்தித்துறை அமைச்சர் மற்றும் ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் சிறப்பு பார்வை யாளராக கலந்து கொண்டார்கள். திருப்பூர் மாநகராட்சிகுட்பட்ட பகுதிக ளில் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் 179 திட்டப்ப ணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் செவ்வாயன்று துவக்கி வைத்தார்.  இதைதொடர்ந்து திருப்பூர் மாநக ராட்சி  3 ஆவது மண்டலம் 49 ஆவது வார்டு  ராக்கியபாளையம், ஆர்.வி.ஈ நகர் மற்றும் 4 ஆவது மண்டலம் 41 ஆவது வார்டு முருகம் பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் உள்ளாட்சி தின விழாவை முன்னிட்டு செய் தித்துறை அமைச்சர் மற்றும் ஆதிதிராவிடர்  நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல் வராஜ் நடைபெற்ற வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டத்தில்  திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மற்றும் மாந கராட்சி மேயர் ந.தினேஷ்குமார்,  திருப்பூர்  மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்  பாடி, மாநகராட்சி 4 ஆம் மண்டலத்தலை வர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை யில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண் டார்கள்.  இந்நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் முகமது சபியுல்லாஹ், உதவி ஆணையர் பி. வாசுகுமார், மாநகர நலஅலுவலர்  மரு. கௌரி சரவணன், வார்டு கமிட்டி உறுப்பினர்  நகராஜ் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.