districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அரசுப் பள்ளியில் வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆய்வு

ஈரோடு, ஜூலை 23- ஈரோடு வீரப்பன்சத்திரத் தில் உள்ள மா.ர.க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் 9ஆம் வகுப்பு முதல் 12  ஆம் வகுப்பு வரை செயல் பட்டு வருகிறது. 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள்  பெரிய குட்டை வீதியில்  இயங்கி வருகிறது. பெரிய குட்டை வீதியில் செயல்ப டும் பள்ளியில் வகுப்பறை கட்டடம் பழுதடைந்த நிலை யில் உள்ளது. இதன் காரண மாக கடந்த 3 ஆம் தேதி கட்ட டத்தில் இருந்த சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்தது. இந்நிலையில், அமைச் சர் சு.முத்துசாமி பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது, பழுதடைந்துள்ள கட்டத்தை முழுவதுமாக இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண் டும். கழிப்பறை வசதி செய்து  கொடுக்க வேண்டும். பள் ளிக்கு ஒரு வழி பாதை மட் டுமே உள்ளதால் மற்றொரு  வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதனைக் கேட்டறிந்த அமைச்சர் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என் றார்.

சமூக வலைத்தளங்களில் அவதூறு அதிமுக பிரமுகர் கைது

அவிநாசி, ஜூலை 23- விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன்  குறித்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக அவதூறு  பரப்பிய அவிநாசி ஒன்றிய அதிமுக பிரமுகரும், புஞ்சைத் தாமரைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவருமான சரவணன்  வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.                 விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடளமன்றம்  உறுப்பினருமான தொல் திருமாவளவன் குறித்து சமூக  வலைத்தளங்களில் ஆபாசமாக அவதூறு பரப்புவதாக,  அவிநாசி காவல் நிலையத்தில் விசிகவினர் புகார் அளித்தனர்.  இதையடுத்து அவிநாசி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அதிமுக அவி நாசி வடக்கு ஒன்றிய துணைச் செயலாளரும், புஞ்சைதாம ரைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவருமான சரவணகுமார்  மற்றும் ரம்யா தமிழ் என்ற முகநூல் முகவரியில் இயங்கி வந்த சென்னையைச் சேர்ந்த பாஜக பிரமூகர் ஆகியோர் அவ தூறு பரப்பியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவிநாசி  காவல்துறைனர் சரவணக்குமாரை கைது செய்தனர்.  மேலும்  சென்னையைச் சேர்ந்த பாஜக பிரமுகரின் முகநூலில் தொடர் புடையவர் குறித்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

அனுமதியின்றி வைத்திருந்த துப்பாக்கி பறிமுதல்

அவிநாசி, ஜூலை 23- அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் அனுமதியின்றி கள்  விற்றவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இவ ரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் புளியந்தோட்டம் பகுதி யில் கள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப் பாளருக்கு வந்த தகவலின் படி, காவல்துறையினர்  சம்பவயிடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.  இதில் அப்பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி(55).  என்பவர்  தனது தோட்டத்தில் கள் இறக்கி விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவிநாசி காவல்துறையின வழக் குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். மேலும்  இவரிடம் அனுமதியின்றி வைத்திருந்ததுப்பாக்கி மற்றும்  விற்பனைக்காக வைத்திருந்த கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இரண்டு மாதங்களாக தெருவிளக்கு எரிவதில்லை   கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்

அவிநாசி ஜூலை 23 - அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகராட்சி குண்ணங் கல் காடு பகுதியில் தெருவிளக்கு எரியாததால் பொதுமக்கள்  அவதிப்படுகின்றனர். அவிநாசி ஒன்றியம் திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 11 ஆவது வார்டுக்கு உட்பட்ட குண் ணங்கல் காடு பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு மாதங்களாக  இரவு நேரத்தில் அப்பகுதியில் தெரு விளக்கு எரிவதில்லை.  இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வரு கின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடமும், உறுப்பின ரிடமும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தெரு விளக்கைச் சீரமைத்துத்  தருமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

தாராபுரத்தில் கஞ்சா விற்பனை 3 வாலிபர்கள் கைது

தாராபுரம், ஜூலை - 23 தாராபுரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட3  வாலிபர்களை போலீசார் கைது  செய்து சிறையில்  அடைத்தனர். தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் காவல் துணை  கண்காணிப்பாளர் தனராசு உத்தரவின் பேரில் போலீசார் தீவிர  ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமராவதி பழைய ஆத்துப்பாலம் கீழே உள்ள பகுதியில் கஞ்சா விற் பனை செய்துகொண்டிருந்த மூன்று வாலிபர்களை பிடித்து  விசாரணை நடத்தினர். இதில் தாராபுரம் சங்கர் மில் பகுதியை  சேர்ந்த தமிழ்செல்வன் (20), கணேசன் (22) மற்றும் புஞ்சை  குளத்து தெருவை சார்ந்த திருமூர்த்தி (22) ஆகியோர் கஞ்சா  விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேர்  மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 150  கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து,  மூவரையும்  சிறையில் அடைத்தனர்.

ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை முயற்சி: ஆசிரியர் சஸ்பெண்ட்

தாராபுரம், ஜூலை  23- தாராபுரத்தில் சி.எஸ்.ஐ மேல்நி லைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து  வரும்  பள்ளி மாணவர்  பிளேடால் கையை அறுத்துக்  கொண்ட சம்பவத் தில் ஆசிரியர் மீது வழக்குபதிவு செய் யப்பட்டது. அதை தொடர்ந்து பள்ளி நிர் வாகம் ஆசிரியரை சஸ்பெண்ட் செய் துள்ளது. தாராபுரம் பொள்ளாச்சி சாலையில்  சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி   செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில்  9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாண வர்  தேர்வு சரியாக எழுதவில்லை என்ப தற்காக சமூக அறிவியல் ஆசிரியர் பிர காசம் ஜெயக்குமார் (50) என்பவர் வகுப் பறையில் வைத்து சக மாணவர்கள் முன் னிலையில் தகாத வார்த்தையால் பேசி  திட்டியதாக கூறப்படுகிறது. இதனால்  ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக  கடந்த 13 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மாண வன் சிஎஸ்ஐ பள்ளி விடுதியில் தற் கொலை செய்து கொள்ள போவதாக சக  மாணவர்களிடம் கூறிவிட்டு பிளேடால் தனது இடதுகை மணிக்கட்டை அறுத் துக் கொண்டார். இதில் காயமடைந்த  மாணவர் திருப்பூர் அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதைதொடர்ந்து மாணவரின் பெற் றோர்கள் திருப்பூர் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்ற அதிகாரி வெள்ளியன்று பள்ளியில் விசாரணை நடத்தினார். அதில் ஆசிரியர் திட்டிய தால் மனமுடைந்த மாணவர் கையை அறுத்துக் கொண்டது உண்மை என  தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியர்  மீது தாராபுரம் போலீசார் வழக்கு பதிந்து  கைது செய்த போது ஆசிரியர் திடீரென  நெஞ்சுவலியால் மயங்கினார். அவரை  உடனடியாக போலீசார் தாராபுரம் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.   இந்நிலையில் சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் சார்பில்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஆசிரியர் மீது வழக்குபதிவு செய்யப்பட் டுள்ளதால் மேல் நடவடிக்கையாக ஆசி ரியர் பிரகாசம் ஜெயக்குமார் பணி யிடை நீக்கம் செய்யப்படுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அரசு கல்லூரியை விரிவு படுத்துக இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

பொள்ளாச்சி, ஜூலை 23- பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரியின் கட்டிடங்களை விரிவாக்கம் செய்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கத் தின் 2ஆவது பொள்ளாச்சி தாலுகா மாநாடு வலியுறுத்தியுள் ளது.  கோவை வேட்டைக்காரன் புதூரில் மாணவர் சங்கத்தின்  பொள்ளாச்சி தாலுகா மாநாடு தோழர் அபிமன்யு நினைவரங் கத்தில் சனியன்று நடைபெற்றது.  மாணவர் சங்க தாலுகா தலைவர் சந்தியா தலைமை வகித் தார். இதில் மாணவர் சங்க கோவை மாவட்ட செயலாளர்  தினேஷ் ராஜா, தலைவர் அசாருதீன் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி,எஸ்.பரமசிவம் ஆகி யோர் உரையாற்றினர். தாலுகா செயலாளர் ரமேஷ் கண்ணன்  வேலை அறிக்கை முன்வைத்தார்.  இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி கல் லூரிகளில் பெண்களுக்கு இலவசமாக நாப்கின்களை வழங்கிட வேண்டும்.  பொள்ளாச்சி  அரசு கலைக்கல்லூரி கட்டி டங்களை விரிவுபடுத்த வேண்டும். பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றியுள்ள மலை கிராமங்களில் இருந்து படிக்க  செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இதில் மாணவர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா தலைவ ராக கோபி, செயலாளராக சந்தியா மற்றும் துணை தலைவ ராக கௌசல்யா, துணை செயலாளராக ரஞ்சித் உள் ளிட்ட 23 பேர் கொண்ட புதிய தாலுகா குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.