districts

img

கீழ்பவானி கால்வாய் கரையில் உடைப்பு: அமைச்சர் நேரில் ஆய்வு

ஈரோடு, டிச.11- பெருந்துறை சாலை, நந்தா கல்லூரி அருகே கீழ் பவானி திட்ட பிரதான கால்வாய் கரையில் சனியன்று உடைப்பு ஏற்பட்டது. பவானிசாகர் அணையிலிருந்து நடப்பாண்டு முதல் போக  நஞ்சை பாசனத்திற்கு 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், கடந்த ஆகஸ்ட்  12 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. விவசாயி களின் கோரிக்கையினை ஏற்று மேலும் 20 நாட்களுக்கு கால  நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், சனியன்று மாலை யில் கீழ்பவானி திட்ட கால்வாயின் வலது கரையில் சிறு  பள்ளம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வலது கரையில் நீர் கசிவு அதிகமாகி உடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இடது கரையில் உடைப்பு ஏற்பட்டு ஓடை வழியாக தண்ணீர் செல்லத் தொடங்கியது. இப்பகுதிகளை தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார். இதையடுத்து பணிகளை விரைந்து முடித்து, மீண்டும் கால் வாயில் தண்ணீரை 10 நாட்களுக்குள் கொண்டு செல்வதற் கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என அவர் தெரி வித்தார்.