districts

img

காச நோயை கண்டறிய 24 டிஜிட்டல் சேவை வாகனங்கள்

ஹெல்த் வாக்கிங் திட்டம்

இருதய அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முன்னோடி யாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் நோய் தொற்று காலத்துக்கு  பிறகு இளம் வயதில் ஹார்ட் அட்டாக் அதிக அளவில் பாதிப்புக்கு உ ள்ளாகி வருவது வேதனை அளிக்கிறது. மருத்துவர்கள் இது குறித்து  ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். இன்றைய இந்தியாவில்  உள்ள அனைத்து மாநிலங்களிலும் மராத்தான் நடத்தப்பட  வேண்டும், மராத்தான் அறிமுகம் இல்லாத  மாநிலங்களிலும் கராத்தான் போட்டிகளை நடத்தி தடம் பதிக்க வேண்டும். ஜப்பான்  சென்றபோது அங்கு ஹெல்த் வாக்கிங் என்ற பெயரில் அனை வரும் நடை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்ற  நடைப்பயிற்சியை தமிழக முழுவதும் கொண்டுவர முதல்வருடன்  ஆலோசனை செய்த பிறகு அதனை தமிழ்நாடு முழுவதும் அறிமுகப் படுத்த உள்ளோம் என மா.சுப்பிரமணி தெரிவித்தார்.

கோவை, பிப்.17- காச நோயை கண்டறிவதற்காக 24 டிஜிட்டல் சேவை உள்ள வாக னங்கள் புதிதாக தமிழ்நாடு அரசு  வாங்கியுள்ளதாகவும், அது விரை வில் பயன்பாட்டுக்கு வர உள்ள தாக மருத்துவம், மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியம் கோவையில் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வு துறையில் 2023-24ஆம்  ஆண்டுக்கான மானிய கோரிக்கை யின் போது அறிவிக்கப்பட வேண் டிய புதிய திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை கூட்டம் கோவை  அவிநாசி சாலையில் உள்ள ஜென் னீஸ் தனியார் நட்சத்திர ஹோட் டலில், அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவ னங்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை நிறுவ னர்கள், அரசு மருத்துவ பணியாளர் கள், அரசு மருத்துவத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர். முன்னதாக, இத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் இதற்கு முன்பு மானிய கோரிக்கை யில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு கள் குறித்தும் அமைச்சர் எடுத்து ரைத்தார். இதனைத்தொடர்ந்து, செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவ வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு இத்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆக்கப் பூர்வமான கருத்துக்களை பதிவு  செய்துள்ளனர். மக்கள் நல் வாழ்வுத் துறையில் இது முதல் முயற்சி. இந்தக் கூட்டத்தில் குறிப் பாக புற்றுநோய், காசநோய், தொழுநோய், சிறு குழந்தை களுக்கும் ஏற்படுகின்ற நீரிழிவு  நோய் உள்ளிட்ட பல்வேறு விஷ யங்கள் எடுத்துச் சொல்லப்பட்டது.

இவைகளுக்கான தீர்வாகவும் பல்வேறு அடிப்படை வசதிகளை  மேம்படுத்துவதற்கு ஆராயப் பட்டுள்ளது. இத்துறையில் பல் வேறு சிறப்பு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருவதும், குறிப்பாக  மக்களை தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 போன்ற  திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளது. மேலும், 708 புதிய  மருத்துவமனைகள் அமையும் என்று முதலமைச்சர் அறிவித் ததில் 500க்கும் மேற்பட்ட மருத்து வமனைகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. அதில் மருத்துவ பணி யாளர்களை நியமிக்கும் பணிகள்  நடைபெற்று வருகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில், தற்பொழுது 750 புதிய வாக னங்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக் காக வாங்கப்பட்டுள்ளது. இதில், காச நோயை கண்டறிவதற்காக 24  டிஜிட்டல் சேவை உள்ள வாகனங் கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. அது கூடிய விரைவில் அது பயன் பாட்டுக்கு வர உள்ளது.  பணியிடங்களை நிரப்பும் வகை யில் ஏற்கனவே அறிவித்த 4308  பணியிடங்களைத் தவிர்த்து 4000  செவிலியர்கள் பணி நியமனங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலை மையில் நேர்முகத் தேர்வு அடிப் படையில் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அதில், கொரோனா காலத் தில் பணியாற்றிய செவிலியர் களுக்கு 40 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அவர்களையும் இதில் சேர்த்துள்ளோம் என்றார்.  இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலர் ப. செந்தில்குமார். தேசிய நலவாழ்வு  இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஸ்.  தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர்  உமா, தமிழ்நாடு மருத்துவ சேவை  கழக இயக்குனர் அரவிந்த் மற்றும்  மருத்துவ வல்லுநர்கள் மற்றும்  தனியார் தொண்டு நிறுவனங்களின் கருத்துக்கள் அனைத்தும் இத் துறை அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.