districts

img

டேன்டீ தொழிலாளர் ஊதிய விவகாரத்தில் விரைவில் தீர்வு

உதகை, மே 7- டேன்டீ தொழிலாளர் ஊதிய விவகா ரத்தில் விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் உறுதியளித்துள்ளார். நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட் டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணி கள் குறித்த ஆலோசனை கூட்டம், உதகை யில் உள்ள தமிழக அரசினர் மாளிகையில் நடைபெற்றது. இதற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச் சர் சி.வி.கணேசன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில், வருகிற மே 12 ஆம் தேதி நடை பெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 200 நிறுவனங்கள் கலந்து கொள்ள வும், அதன் மூலம் சுமார் 15 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தது ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச் சர் அறிவுறுத்தினார். இதையத்து அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொழி லாளர் நலத்துறையில் இதுவரை 37 லட் சத்து 50 ஆயிரம் அமைப்புசாரா தொழிலா ளர்கள் பதிவு செய்துள்ளனர்.

அதில், கடந்த ஆட்சி காலத்தில் ஏறக்குறைய 75 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்காமல் இருந்தது. இதற்காக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப் பட்டு, அதன் மூலம் தொழிலாளர்கள் அடை யாளம் காணப்பட்டு, முதற்கட்டமாக 50 ஆயி ரம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் 10 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ரூ.2 ஆயிரத்து 877 கோடியில் சுமார் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், புதிதாக 11 தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக் கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், டேன்டீ தொழி லாளர்களின் குறைந்தபட்ச ஊதிய விவகா ரம் தொடர்பாக ஆய்வு நடத்த ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டது. தற்போது  கூடுதலாக ஒரு துணை குழுவும் அமைக் கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விரை வில் சுமுக தீர்வு காணப்படும், என உறுதி யளித்தார். இதைத்தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள உதகை பழங்குடி யினர் பண்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை  அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண் டார். இதில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் வீரராகவராவ், மாவட்ட  ஆட்சியர் அம்ரித், காவல் கண்காணிப்பா ளர் ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலு வலர் கீர்த்தி பிரியதர்ஷினி உட்பட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்ட னர்.