திருப்பூர், ஜூன் 23 - திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவில்வழியில் ரூ.26 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டினார். இத்துடன் நடராஜ் திரை யரங்கம் அருகே ரூ.14 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலக திறப்பு விழாவும் வெள்ளி யன்று நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி 3ஆம் மண்டலம், 60ஆவது வார்டுக் குட்பட்ட கோவில் வழியில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சி யில் இப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேசு கையில், பல்வேறு வசதிகளை கொண்டதாக கோவில்வழி பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படும். அதேபோல் திருப்பூ ரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நொய் யல் ஆற்றின் கரையோரம் நடராஜ் திரையரங்கம் அருகே ரூ.14 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படுகிறது. இவை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்ப டும் என்றார். இதைத்தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திமுக முத்திரை கொடுக்கப்படுவதாக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தது குறித்த கேள்விக்கு, ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட எந்த திட்டமானாலும் மக்கள் வரிப்பணத்தில் செய்யக்கூடிய பணிகள். இதில் எந்தவித அரசியல் முத்திரை குத்தப்படுவதற்கான நோக்கம் கிடையாது, எனத் தெரிவித் தார். இந்நிகழ்வுகளில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாரயணன், துணை மேயர் ரா.பாலசுப்ரமணி யம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.