திருப்பூர், பிப்.9- திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியில் ரூ.5.12 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளி யன்று துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட பகுதிகளில் ஜோத்தம்பட்டி ஊராட்சி, ஜோதிநக ரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம், பாப்பன்குளம் ஊராட்சியில் பாப்பான்குளத்தில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம், மைவாடி ஊராட்சியில் ரூ.60.50 லட்சம் மதிப்பீட்டில் மைவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நுழை வுவாயில் என மொத்தம் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள், மடத்துக்குளம் வட்டத்தில் ரூ.4.92 கோடி மதிப் பீட்டில் அமராவதி பிரதானக் கால்வாயின் சரகம் 7.5.440 மைல் முதல் 16.5.00 மைல் வரை அமைந்துள்ள குறுக்குக்கட் டட அமைப்புகளை புரனமைக்கும் பணி, மைவாடி ஊராட்சி கோளரப்பட்டியில் ரூ.20.20 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கம் கட்டடம் அமைக்கும் பணி என மொத் தம் ரூ.5.12 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளியன்று துவக்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத்தலைவர் இல.பத்மநா பன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் கோபி, மடத்துக்கு ளம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் காவியா ஐயப்பன், உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) பாலசுப்பி ரமணியம், உதவி பொறியாளர் தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எத்திராஜ், நாகலிங்கம், உதவி பொறி யாளர் ரவீந்தரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண் டனர்.