districts

img

தவறு செய்யும் சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை

சேலம், ஜூன் 21- தவறு செய்யும் சார்பதிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலத்தில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை சம்பந்தமான மண்டல அளவிலான சீராய்வு கூட்டம் சேலம் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப் போது அவர் பேசுகையில், தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பத்திர பதி வுத்துறை அலுவலங்களில் நடை பெறும் பதிவுப்பணிகளில் வெளிப் படைத்தன்மையை உறுதிசெய்தி டும் நோக்கிலும் ஊழலை தடுத்தி டும் நோக்கிலும் கண்காணிப்பு நடவ டிக்கைகள் தொடர்ந்து மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. பதிவு அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது. ஆவணம் எழுதுபவர்கள் கடை பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் பதிவுத்துறை தலைவரால் பல்வேறு சுற்றறிக்கைகளின் வழி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இச் சுற்றறிக்கைகளின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட துணை பதிவுத்துறை  தலைவர்கள் மற்றும் மாவட்டப்பதி வாளர்கள் திடீராய்வுகளின் போது ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் நடமாட்டம் உள் ளதா?

என்பதை கண்காணித்து வரு கின்றனர்.  தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் உரிம விதிகளின் கீழான விதி 9 மற் றும் 13(எ)-இன்படி வழங்கப்படும் ஆவண எழுத்தர் உரிமத்திற்கான நிபந்தனை (J)-இல் அலுவலக நிமித்த மாக அழைக்கப்பட்டால் தவிர அலு வலகத்திற்குள் ஆவணம் சார்பதி வாளரால் எழுதுவோர் நுழையக் கூடாது என உள்ளது. இதனை மாவட் டப்பதிவாளர்கள் மற்றும் மண்டல துணை பதிவுத்துறை தலைவர்கள் தங்களது திடீராய்வுகளின் போது உறுதிசெய்திடவும், சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் அமரும் இடத்தை ஆவணம் எழுது பவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதனையும் கண்கா ணித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த விதிகளை மீறி சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் எழுது வோர் மற்றும் இடைத்தரகர்களின் செயல்பாடு, நடமாட்டம் கண்டறியப் பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது  ஆவண எழுத்தர்கள் உரிம விதிகள், 1982-இன் விதி 16 மற்றும் சுற்றறிக் கைகளின் கீழ் உரிய நடவடிக்கை  மேற்கொள்ளப்படும். விதிமுறை களை மீறுபவர்களது உரிமம் ரத்து  செய்வதோடு, இதனை கண்காணித் திட தவறும் சார்பதிவாளர்கள் மீது கடு மையான ஒழுங்கு நடவடிக்கை எடுக் கப்படும், என தெரிவித்தார். இக்கூட்டத்தில், அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மண்டல துணைத் தலை வர் பிரபாகர் உள்ளிட்ட அதிகாரி கள் பங்கேற்றனர்.