districts

img

தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகம்தான்

கோவை, ஜூன் 26- பல தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிக மாக இருக்கிறது. கல்வி பணி என்பது வர்த் தகத்தை தாண்டி மாணவர்களின் எதிர் காலத்தை நாம் தீர்மானிக்கிறோம் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.  கோவையில் உள்ள தனியார் பள்ளிக ளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் விழா தடாகம் சாலையில் உள்ள தனியார் பள்ளி  வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, பள்ளிக்களுக்கான அங்கீகார  ஆணையை வழங்கினார். அப்போது அமைச் சர் அன்பில் மகேஷ் பேசுகையில், அங்கீ கார ஆணைகளை வழங்க வேண்டும் என முடிவு செய்தவுடன், அதற்கான பணிகள் தீவிரப் படுத்தப்பட்டது. முதலில், திருச்சியில் உள்ள பள்ளிகளுக்கு ஆணைகள் வழங்கினோம், அடுத்த கட்டமாக கோவை மண்டலத்தில் ஆணைகளை வழங்குகிறோம். கல்வி பணி என்பது வர்த்தைத்தை தாண்டி, உங்கள் பள் ளியை தேடி வரும் மாணவர்களை சிறந்த மனிதனாக மாற்றும் உன்னத பணிகளை செய்து வரும் உங்களுக்கு அங்கீகார ஆணையை வழங்குவதில் எனக்கு பெருமை யாக உள்ளது.  தனியார் பள்ளிகளில் தாய்மொழியான தமிழை கற்றுக்கொடுக்க தனியாக ஆசிரியர் நியமித்து கற்றுக்கொடுக்க வேண்டும்.

பொது வாக மெட்ரிக்குலேசன் மட்டுமின்றி, சிபி எஸ்சி ஆகிய பள்ளிகளுக்கு திடீர் ஆய்விற்கு செல்லும் போதும், அங்கு தமிழ் ஆசிரியர் யார் என கேட்டு தெரிந்து கொள்வது எனது வழக்கம். தற்போது, சில பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் தனியாக இருந்தாலும், தனியார் பள்ளிகளும் தாய்மொழியை மாணவர்க ளுக்கு கொண்டு செல்லும் பணியில் தங்களை  முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.  தனி யார் பள்ளி கட்டணத்தில் பல்வேறு சலுகை களை வழங்கினாலும், சில பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது  அனைத்து தனியார் பள்ளிகள் மீதும் இந்த  பார்வை செல்கிறது. கொரோனா காலத்திற்கு பிறகு மக்களும் பல்வேறு சிரமங்களுக் கிடையே உள்ளனர், பள்ளி நிர்வாகத்தினரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என தெரியும். உங்களுக்கும் அரசு துணை நிற்கும், எங்க ளுக்கு நீங்களும் துணையாக நில்லுங்கள். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள ஒன் றறை கோடி மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து ஒவ்வொரு திட்டத்தையும், செயல்பாட்டையும் செய்வோம், என்றார்.   இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர்  கல்பனா ஆனந்த்குமார், ஆணையர் மு.பிர தாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.