districts

img

பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஏப்.2- 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர் கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். ஆவின் கலப்பு  தீவனம் 50 விழுக்காடு மானிய விலையில் வழங்க வேண்டும். கர்நாடகாவைப் போல லிட்டருக்கு  ரூ.5 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் பால் மற்றும் பால் பொருட்களை சேர்க்க வேண்டும். பாலை வாக னத்தில் ஏற்றும் முன்பாக அள வையும், தரத்தையும் குறித்து  கொடுக்க வேண்டும் உள்ளிட்ட  14 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சத்திமங்கலம், அரியப்பம் பாளையம் - புளியம்பட்டி பிரிவில் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப் பினர் செல்லிக்கவுண்டர் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நோக்கங்களை விளக்கி  பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.எம். விஜயகுமார், தமிழ்நாடு விவசாயி கள் சங்க தாலுகா தலைவர் பி. கணேஷ், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் சா.க.அருள்மொழி ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு விவ சாயிகள் சங்க தாலுகா செயலாளர் பி.வாசுதேவன், ராம்தாஸ், சுரேஷ்,  ராதாகிருஷ்ணன், விஜயன் உட்பட பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம், சந்தனூர் மேடு கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பால் உற்பத்தி யாளர்கள் சங்க நிர்வாகி எம்.கணேசன் தலைமை ஏற்றார். இதில்,  மாவட்ட செயலாளர் தீர்த்தகிரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள்  மாதையன், குப்பன், குமார், உத்திர குமாரன், முனியப்பன், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தி‌.தனுசன் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.