கோவை, ஆக.13- சூலூர் இந்திய விமானப் படைத் தளத்தில் ராணுவ தளவாடங்கள் கண் காட்சி ஆக. 15 ஆம் தேதியன்று பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் விமானப் படை தளத்தில் ‘தரங் சக்தி-2024’ எனும் பன்னாட்டு விமான பயிற்சி நிகழ்ச்சி கடந்த 6 ஆம் தேதியன்று துவங்கியது. விமான பயிற்சியில், இந்தியாவோடு ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கி லாந்து ஆகிய நாடுகள் கலந்து கொண்டு ஒத்திகைகளை மேற்கொண்டனர். இந் நிகழ்வில், இந்தியாவின் தேஜஸ், ஜெர் மனியின் டைபூன் உள்ளிட்ட உயர்ரக போர் விமானங்கள் பங்கேற்றன. இந் நிலையில், ராணுவ தளவாடங்கள் மற் றும் போர் விமான கருவிகளின் கண் காட்சி செவ்வாயன்று சூலூர் விமானப் படைத்தளத்தில் துவங்கியது. இதில், 62 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமி டெட், பெல் உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் தங்களது தயா ரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இக் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வை யிட்டார். செவ்வாய் மற்றும் புத னன்று (இன்று) இக்கண்காட்சியினை ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் மற்றும் ராணுவப் படையினர் பார்வை யிடுகின்றனர். விமானப்பயிற்சி நிறைவு நாளான ஆக.15 ஆம் தேதியன்று பொது மக்கள் இக்கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இக்கண்காட்சியை காண வருபவர்கள் ஆதார் அட்டை மற்றும் இத னோடு சேர்ந்த மற்றொரு ஆவணம் கொண்டு வர வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.