districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து 2 பேர் உயிரிழப்பு: அமைச்சர் நேரில் அஞ்சலி

சேலம், டிச.20- மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வியாழனன்று ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின் நிலை யத்தில் மின் உற்பத்தி பணியில் இரண்டு பிரிவுகள் செயல் பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்  கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம்  உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600  மெகாவாட் திறன் கொண்ட ஓர் அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவு களிலும் சேர்த்து மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற் பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், வியாழனன்று மாலை  முதல் பிரிவின் மூன்றாவது அலகில் 50 அடி உயரமுள்ள  நிலக்கரி சேமிப்புத் தொட்டியின் கீழ் பகுதியில் தொழிலா ளர்கள் 7 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். திடீரென  அந்தத் தொட்டி கீழே சரிந்து விழுந்தது. இவ்விபத்தில் மேட்டூர் வட்டம், நாட்டாமங்கலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (50), எடப் பாடி வட்டம், கொத்தபாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி (28)  ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம டைந்த பொறையூரைச் சேர்ந்த மனோஜ் (27), மாதையன் குட்டையைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (23), சீனிவாசன் (44), கௌதம் (20), வனவாசியைச் சேர்ந்த முருகன் (22) ஆகிய 5 பேரையும், அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மனோஜ் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  

அமைச்சர் நேரில் அஞ்சலி

இவ்விபத்தில் காயமடைந்து மேட்டூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் வியாழனன்று  நேரில் சந்தித்து,  ஆறுதல் கூறினார். தொடர்ந்து வெள்ளியன்று மேட்டூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்க ளுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், இவ்விபத் தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா  ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளையும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 5 நபர்களுக்கு தலா ரூ.2 லட்சத்திற் கான காசோலைகளையும் வழங்கினார். 

தறிப்பட்டறை உரிமையாளர்கள் போராட்டம்

நாமக்கல், டிச.20- குடிசைத் தொழிலாக இயங்கி வரும் தறிப்  பட்டறைகளுக்கு தொழில் வரி விதிக்க எதிர்ப்பு தெரிவித்து, தறிப்பட்டறை உரிமை யாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள விசைத்தறிக் கூடங்க ளுக்கு சொத்து வரியை உயர்த்துவதாக அதி காரிகள், கடந்த மாதம் அனைத்து விசைத் தறிக்கூடங்களுக்கும் நோட்டீஸ் அளித்தனர். இந்நிலையில், திருச்செங்கோடு அடுத் துள்ள சூரியம்பாளையம் பகுதியில் திருச் செங்கோடு நகராட்சி அலுவலர்கள் விசைத் தறிக் கூடங்களை அளவெடுக்க வந்தனர். தறிப்பட்டறை உரிமையாளர்கள் ஒன்று திரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவ தாக அமைச்சர்கள் உறுதியளித்த நிலையில், என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதற்குப் பிறகு அளந்து கொள்ளலாம் எனக்கூறி அவர் களை திருப்பி அனுப்பி போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, திருச்செங்கோடு வட்டாரத் தில் விசைத்தறிகளை நிறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டி ருந்தது. இந்நிலையில், அரசு இறுதி முடிவு எடுக்கும் வரை தொழில் வரி விதிக்கும் பணி யினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சேலம் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் உத் தரவிட்டார். இதனால் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக, விசைத்தறி உரிமையா ளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நிரந் தரமாக இதற்கு தீர்வு காணக்கோரி திருச் செங்கோடு நகர்மன்றத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, டிச.20- ஊழியர்களை கடுமையாக நடத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து  விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும். ஊழியர்கள் மீது பெரும் பணியை சுமத்துவ தையும், நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்கிற பெயரில் ஊழியர்களை கடு மையாக நடத்துவதையும் கைவிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப் பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்டத் தலை வர் கி.வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில், செயலாளர் சி.பிரபு, பொருளாளர் மா. முருகன், மகளிரணி தலைவர் சி.சண்முக பிரியா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, நில  அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாநில  துணைத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் சுரேஷ், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி, நிர்வாகிகள் முருகபெருமாள், ஸ்ரீபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் டிஎஸ்பி மீது மக்கள் புகார்

முன்னாள் டிஎஸ்பி மீது மக்கள் புகார் ஈரோடு, டிச.20- கொலை மிரட்டல் விடுப்பதாகக்கூறி முன்னாள் டிஎஸ்பி மீது பொதுமக்கள் புகாரளித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், குண் டுமூப்பனூரில் கான்க்ரீட்  சாலை அமைக்கப்பட்டுள் ளது. அதில், 30 சென்ட் பகு தியை ஓய்வுபெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் முத்துசாமி, அவரது மகன் ராஜேஷ் ஆகியோர் ஆக்கி ரமிப்பு செய்துள்ளதாக கூறப் படுகிறது. இதுகுறித்து கேட்ட அப்பகுதி பொதுமக்களை சாதியைச் சொல்லி, தகாத வார்த்தைகளால்  திட்டியுள் ளார். இதுகுறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் புகாரளித் துள்ளனர்.