districts

img

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

சேலம், ஜூலை 1-  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வரு கிறது. கர்நாடகா மாநிலத்தில் பெய்து  வந்த மழை காரணமாக அங்குள்ள  அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இத னால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிக ரித்தும், குறைந்தும் காணப்படு கிறது. இந்நிலையில், வெள்ளி யன்று அணைக்கு வரும் நீரின் அளவு 145 கன அடியாக இருந்தது.  சனியன்று அணைக்கு வரும் நீரின்  அளவு 120 கன அடியாக குறைந் துள்ளது.   அணையின் நீர் மட்டம் 89.51 அடி யாகவும், அணையின் நீர் இருப்பு  52.09 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத் திற்காக மேட்டூர் அணையி லிருந்து 90ஆவது ஆண்டாக ஜூன்  12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட் டுள்ளது. இதனால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக 17 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 13,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 12,000 கன அடி யாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து  அணை மின் நிலையம் மற்றும்  சுரங்க மின் நிலையத்தின் வழியாக  தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் 2,500  கன அடி 16 கண் மதகுகள் வழியாக  தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப் பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக் கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப் பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500  கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வரு கிறது. கர்நாடக அணைகளை பொறுத் தவரை வெள்ளியன்று கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 78 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 9.93 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 517 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து விநாடிக்கு 2,871 கன அடி  நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபிணி அணையை பொறுத்த வரை அணையின் நீர்மட்டம் 31.67  அடியாக உள்ள நிலையில், அணை யின் நீர் இருப்பு 4.27 டி.எம்.சி ஆக வும் உள்ளது. அணையில் இருந்து  விநாடிக்கு 115 கன அடி நீர் வந்து  கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு  300 கன அடி நீர் வெளியேற்றப் பட்டு வந்த நிலையில் தற்போது  முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.