districts

img

சாலையோர வியாபாரிகளுக்கு அச்சுறுத்தல்: சிஐடியு புகார்

கோவை, ஜன.10- சாலையோர வியாபாரத்தில் ஈடு பட்டு வரும் அப்பாவி உழைப்பாளி மக்களை மிரட்டும் சமூக விரோதி களிடமிருந்து, வியாபாரிகளை பாது காக்க வேண்டும் என சிஐடியு கோவை மாவட்ட சாலையோர வியா பாரிகள் சங்கத்தினர் ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் வெள்ளி யன்று மனு அளித்தனர்.  சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சாலையோர வியா பாரிகள் சங்க மாவட்டத் தலைவர் கே. ரத்தினகுமார், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.ராஜன், எம்.ஆனந்த் குமார் ஆகியோர் ஆட்சி யரிடம் வெள்ளியன்று மனு ஒன்றை அளித்தனர். அதில், கோவை மாவட் டத்தில் சாலையோரங்களில் ஆயிரக் கணக்கானோர், தங்களது வாழ்வா தாரத்தை பாதுகாக்க சிறுசிறு கடை களை அமைத்து பிழைத்து வருகின் றனர். இவர்களுக்கு சமீப காலமாக சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலை யோர வியாபாரிகளுக்கு வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது. சமீபத்தில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, உடையாம்பாளையத்தில் தள்ளு வண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த பொழுது, சிலர் வந்து இங்கே ஊர் கட்டுப்பாடு பீப் பிரி யாணி வியாபாரம் செய்யக்கூடாது என மிரட்டி உள்ளனர். இத்தகைய நபர் மீது ஆட்சியர் கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும். மேலும், இது போன்று சாலையோர வியாபாரி களை அச்சுறுத்தும் சமூக விரோதி கள் மீது புகார் வரப்பெற்றால் உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அதில் தெரிவித்துள்ளனர்.