ஈரோடு, ஜன. 30- தேசப்பிதா, மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை யொட்டி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பெருந்துறையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தேசப்பிதா, மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30 தேதியன்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத் தரங்கத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.எஸ்.இஸாரத் அலி தலைமை வகித்தார். ஏ.ஹாத்திம் தாய் வரவேற்றார். மக் கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில உதவி தலை வர் ப.மாரிமுத்து, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், ஓய்வு பெற்ற ஆசிரியரும், மேற்கு நடு நிலைப்பள்ளி பெற்றோர், ஆசிரியர் சங்க தலைவருமான பி.எஸ்.கே.பாட்சா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறை வாக சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டக்குழு உறுப்பினர் வி.ஏ.விஸ்வநாதன் நன்றி கூறினார்.