கோவை, நவ.4- மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை, ரோட்டரி டெக்ஸ் சிட்டி ஒருங்கிணைந்து நடத்தும் மெகா இளைஞர்கள் மாநாடு (யுவ இந்தியா 2022) போதை பொரு ளுக்கு எதிரான விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, பல்வேறு வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை இலக் காக கொண்டு நவ.16,17,18 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீ ரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை யில் செய்தியாளர் சந்திப்பு வெள்ளி யன்று நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ் ணன், யுவ இந்தியா சேர்மன் கே.ஏ. குரியாச்சன், தலைவர் சி.ஆர். விஜய், செயலாளர் நஞ்சன் பாலு ஆகியோர் கலந்து கொண்டார். அப் போது “யுவ இந்தியா – 2022” நிகழ்ச்சி குறித்த சிற்றேடை ஆட்சி யர் ஜி.எஸ்.சமீரன், மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டனர். முன்னதாக, மாவட்ட ஆட்சி யர் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளர் களிடம் கூறுகையில், கோவை இந் துஸ்தான் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை, ரோட்டரி டெக்ஸ்சிட்டி ஒருங்கி ணைந்து நடத்தும் மெகா இளை ஞர்கள் மாநாடு (யுவ இந்தியா - 2022) போதை பொருளுக்கு எதி ரான விழிப்புணர்வு, சாலை பாது காப்பு, பல்வேறு வேலைவாய்ப்பு கள் ஆகியவற்றை இலக்காக கொண்டு நவ.16,17,18 ஆகிய நாட் கள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச் சியில், பள்ளி குழந்தைகள் 1000 பேரும், கல்லூரிகளை சேர்ந்த 9000 இளைஞர்களும் கலந்து கொள்ள வுள்ளனர். மேலும், பல்வேறு துறை களை சேர்ந்த ஊக்கமளிக்கும் பேச் சாளர்கள், உயர் அலுவலர்கள் வருகை தர உள்ளனர். இந்நிகழ்ச் சிக்கு போதுமான பாதுகாப்பு ஏற் பாடுகள் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்படும். போதை பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் இளைஞர்களை பங்கெடுக்க வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் தடுப்பு குறித்து குறும்படம் எடுக் கும் போட்டிகள் நடத்தப்பட்டு, 182 குறும்படங்கள் வரப்பெற்றுள்ளன. இதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த 10 குறும்படங்கள் நிகழ்ச்சி யின்போது ஒளிபரப்பப்படவுள் ளது. இந்த 10 படங்களிலிருந்து மிகச்சிறந்த 5 குறும்படங்கள் தேர்வு செய்யப்படும். அந்த குறும்பட இயக் குநர்களுக்கு திரைப்பட இயக்கு நர் லோகேஷ் கனகராஜ் உடன் உரையாடும் வாய்ப்பு வழங்கப் படும். மேலும், இவர்களில் சிறந்த ஒருவருக்கு லோகேஷ் கனகரா ஜின் அடுத்த படத்தில் துணை இயக் குநராக பணியாற்ற வாய்ப்பு கிடைக் கும். இதன் மூலம் இளைஞர்களின் திறன்களை கண்டறிந்து வெளிக் கொண்டு வரவும், போதை பொருள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த போட்டி சிறந்த வாய்ப்பாக இருக் கும். மேலும், ராணுவம், விமான படை, கடற்படை போன்ற யூனி பார்ம் சர்வீஸ்களில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து வழி காட்டுதல் வழங்கப்படும். போதை பொருட்கள் பழக்கத்தாலும், சாலை விபத்துக்களினாலும் இளைஞர் கள் பழியாகமல் இருக்கவும் வழி காட்டுதல் வழங்கப்படும் என்றார். பருவமழை மேலும், வடகிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட கூடிய தாக கண்டறியப்பட்டுள்ள வால் பாறை, மேட்டுப்பாளையம், ஆனை மலை உள்ளிட்ட 16 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முன் னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளன. மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் குளங்கள், குட்டைகள் தூர்வாரப்படும் பணிகள் மாநக ராட்சிகளில் 85 சதவிகிதமும், பிறப் பகுதிகளில் 90 சதவிகிதம் நிறை வடைந்துள்ளது. மாநகராட்சிகளில் இன்னும் ஒரு வாரங்களில் மீத முள்ள பணிகள் நிறைவடையும், என்றார்.