districts

img

மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை: ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஆக.16- மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை செய் யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாதர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா வில் மருத்துவக் கல்லூரி மாணவியை கும்பலாக சேர்ந்து பாலியல் வன்கொ டுமை செய்து, கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதில் ஈடுபட்ட குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கம் சார்பில் நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக நாமக்கல் மாவட் டம், திருச்செங்கோடு அருகே உள்ள  மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்ப மலை, மணலி பிரிவு சாலையில் வியாழ னன்று மாதர் சங்கத்தினர் மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட துணைத்தலைவர் பழனி யம்மாள் தலைமை வகித்தார். இதில் ஒன்றியத் தலைவர் சாந்தி, செயலாளர் மோகனப்பிரியா, மாவட்டக்குழு உறுப் பினர் செல்லம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள் பேரணி இதேபோன்று, பயிற்சி மருத்தவர் வன்கொலை செய்யப்பட்டதை கண்டித் தும், மருத்துவர்களுக்கு உரிய பாது காப்பு வழங்கக்கோரியும் நாடு முழுவ தும் பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட் டத்தில் வருகின்றனர். அதன் ஒரு பகுதி யாக சேலம் அரசு மோகன் குமாரமங்க லம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை பயிற்சி மருத்துவர்கள் அமைதி ஊர்வலத்தை நடத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட மருத்துவப் பயிற்சி மாணவர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.