districts

அரசு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.2- கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண் டித்து, அரசு ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மாநிலம், கொல் கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவ மனையில் இரவு பணியில் இருந்த முதுகலை மருத்துவ மாணவி பாலி யல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட் டார் இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப் பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன்ஒருபகுதியாக தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழி யர் சங்கத்தினர் திங்களன்று, மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் நா.திருவரங்கன் தலைமை வகித் தார். இதில், மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்டப் பொருளாளர் செல்வம், மாவட்ட நிர்வாகிகள் அர்த்தனாரி, சண்முகம், சிங்கரா யன், ஸ்ரீபதி, திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம், ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கோ.பழனியம்மாள், மாநில செயற்குழு உறுப்பினர் முரு கன், மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை, துணைத்தலைவர்கள் ப.சங்கர், குணசேகரன், பெ.மகேஸ் வரி, வட்ட நிர்வாகிகள் தேவகி, திம்ம ராயன், பன்னீர், முன்னாள் தலைவர் கள் ஏ.சேகர், கே.புகழேந்தி, சி. காவேரி, நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் எ.அம்சவேணி தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செய லாளர் ப.செந்தில்குமார், மருத்து வத்துறை சிவகுமார், வருவாய்த் துறை ரமேஷ், கிராம சுகாதாரர்  செவிலியர் சங்க தங்கமணி, நெடுஞ் சாலைத்துறை சங்க மாலதி ராணி,  சாலைப்பணியாளர் சங்க நாகராஜ்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாவட்டச் செயலாளர் ஆர்.மகேஸ் வரன், அரசு ஊழியர் சங்க மாநில  செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எம்.வேலு மணி, மாவட்ட பொருளாளர் ப.நட ராஜன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஈரோடு ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜி.சசிகலா தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாவட்டச் செயலாளர் ச.விஜய மனோகரன் துவக்கவுரையாற்றி னார். தமிழ்நாடு வருவாய்த்துறை  அலுவலர் சங்க மாநில துணைத்தலை வர் கு.குமரேசன் நிறைவுரையாற்றி னார். மாவட்டப் பொருளாளர் ஆர். சுமதி உள்ளிட்ட திரளானோர் மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.