தருமபுரி ஜன-8, தருமபுரி மாவட்டத்தில் ஊழி யர் மீது சாதிவெறி தாக்குதல் நடத்திய வர்களை கைது செய்ய கோரி மக்க ளைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர் சங்கத்தினர் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் சேக் கிப்பட்டி ஆரம்பசுகாதார நிலையத் தில், மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர் தனலட்சுமி மற்றும் அவரது கனவர் செந்தில் ஆகியோர் நோயாளிகளுக்கு மருந்து கொடுக் கும் போது, சாதி ஆதிக்கத்தை சேர்ந்த சிலர் இழிவாக பேசி கொலை வெறி தாக்குதல் நடத்தினர். மருத்துவதிட்ட ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சாதி ஆதிக்க சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊழியர்களுக்கு பணியி டத்தில் பாதுகாப்பு வழங்கவேண் டும். என வலியுறுத்தினர். மேலும், மக்களைத்தேடி மருத்துவ திட்ட ஊழி யர்களுக்கு ஊதிய உயர்வு வழங் கவேண்டும், பணிவரன்முறை செய் யவேண்டும். பொங்கல் போனஸ் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக் கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கோகிலா தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நா கராசன் உள்ளிட்டோர் உரையாற்றி னர்.