கரியக்கோவில் அணை நீர்மட்டம் சரிவு கோடை மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்
சேலம், ஏப்.24- சேலம், கரியக்கோவில் அணையின் நீர்மட்டம் சரிந்துள்ள நிலையில், அப்பகுதி விவசாயிகள் கோடை மழையை எதிர் நோக்கியுள்ளனர். சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரம், பாப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லி யன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப் பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது. இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழு புளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப் பட்டி ஆகிய கிராமங்களில், 3 ஆயிரத்து 600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது. கரியக் கோவில் ஆற்றில் பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாண கிரி, கொட்டவாடி கிராமங்களிலுள்ள தடுப்பணைகள் மற்றும் கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர். அபிநவம், புத்திர கவுண்டன்பாளையம் ஏரிகளில் இருந்து ஏறக்குறைய 3 ஆயி ரம் ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசனம் பெறுகின்றன. கடந் தாண்டு இறுதியில் பெய்த பருவமழையால் அணையில், 49.98 அடி உயரத்தில் 171 மில்லியன கன அடி தண்ணீர் தேங்கி யது. நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டு மென, அணைப்பாசன புதிய ஆயக்கட்டு மற்றும் ஆறு மற்றும் ஏரிப் பாசன பழைய ஆயக்கட்டு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அணையிலிருந்து புதிய ஆயக் கட்டு அணை வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து மார்ச் மாதத்தில் 24 நாட்களுக்கு தலைமை மதகுகள் வழியாக விநா டிக்கு 40 கனஅடி வீதம் கரியக்கோவில் ஆற்றிலும், புதிய ஆயக்கட்டான அணை வாய்க்கால் பாசனத்திற்காக அணை யின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் விநாடிக்கு 15 கனஅடி வீதம் 21 நாட்களுக்கு சுழற்சி முறையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் செவ்வா யன்று நிலவரப்படி 27.52 அடியாக சரிந்தது. தற்போது அணை யில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே எஞ்சியுள் ளது. கோடைகாலம் தொடங்கிய நிலையிலேயே அணையின் நீர்மட்டம் சரிந்து போனதால், எதிர்வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடும் வறட்சி நிலவும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வறட்சியை சமாளிக்க கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
டிராக்டர் கவிழ்ந்து கணவன், மனைவி பலி
நாமக்கல், ஏப். 24- ராசிபுரம் அருகே விவசாய நிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி யான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த குருவாளா பஞ்சாயத்திற்கு உட்பட்ட மூலக்காடு பகுதியில் சிவ குமார் (50), கீதா (42) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் களுக்கு 8 ஏக்கர் விவசாய நிலம் சொந்தமாக உள்ளது. இந் நிலத்தில் குச்சி கிழங்குகளை பயிரிட்டு பராமரித்து வந்த னர். அருகாமையில் தக்காளி செடிகள் பயிரிடப்பட்டுள்ள நிலையில், செடிகள் சாயாமல் இருப்பதற்காக குச்சிகளை வைத்து கட்டுவதற்காக டிராக்டரின் மூலம் குச்சிகளை ஏற்றி சென்றுள்ளனர். பணி முடிவு பெற்ற நிலையில், கணவன் மனைவி இரு வரும் வீடு திரும்பி உள்ளனர். வீடு திரும்பும் நிலையில் மனைவி கீதாவிடம் சிவகுமார் டிராக்டர் ஓட்ட கொடுத்துள் ளார். டிராக்டரை இயக்கி வந்த கீதா எதிர்பாராத விதமாக விவ சாய நிலத்தில் டிராக்டர் தலை குப்புற கவிழ்ந்து சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி தம்பதியினர் இருவரும் பலியாகி னர். இச்சம்பவத்தை அறிந்து நாமகிரிப்பேட்டை காவல் துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கணவன், மனைவி இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக் காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டர் கவிழ்ந்த விபத்தில், கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களி டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி?
செந்தில்பாலாஜி விளக்கம்
செந்தில்பாலாஜி விளக்கம் கோவை, ஏப். 24- ஒருபோதும் திருமண மண்டபங்களில் மது பயன்பாட்டிற்கு வராது என அமைச் சர் செந்தில்பாலாஜி கோவையில் செய்தியா ளர்களிடம் உறுதியளித்தார். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மின்சாரம் மற்றும் மதுவி லக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந் தில் பாலாஜி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், திருமண மண்டபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மது அருந்த அனு மதி வழங்கப்படாது. முதலீட்டாளர்கள் மாநாடு, ஐபிஎல் போன்ற சர்வதேச நிகழ்வு களில் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப் படுகிறது. இது இந்தியாவில் எல்லா மாநிலங் களிலும் உள்ளது. சர்வதேச போட்டிகள் நடை பெற வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள சிறப்பு அனுமதி தேவை உள்ளது. சென்னை யில் மற்ற மாநிலங்களைப் போல ஐபி எல்க்கு அனுமதி வாங்கியுள்ளனர் என்றார். மேலும், மின் பயன்பாட்டின் உச்சபட்ச தேவை இருந்தாலும், இன்னும் கூடுதலாக மின் தேவை ஏற்பட்டாலும் சமாளிக்க மின்வாரி யம் தயாராக உள்ளது. சில பேர் அரசின் மீது அவதூறு பரப்ப பொதுவான கருத்தை பரப்பு கின்றனர். ஒருவர் ட்விட்டரில் புகார் போடும் பொழுது மின் இணைப்பு என்னுடன் பதிவிட வேண்டும். மின் இணைப்புடன் பதிவிட்டால் இரண்டு நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்ப டும். மின் தேவை எந்த பாதிப்பும் இல்லை சீரான மின் வினியோகம் வழங்கப்படுகிறது என்றார்.
மேதினப்பேரணியில் 500 பேர் பங்கேற்க முடிவு
திருப்பூர், ஏப்.24- வேலம்பாளையத்தில் மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சி பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில், மேதினப்பேரணியில் 500 பேர் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற உலகத் தொழிலாளர்களின் உரிமையை வென் றெடுத்த மேதினப் பேரணியில் 5௦௦ பேர் பங்கேற்பத்து என்று வேலம்பாளையத்தில் நடைபெற்ற மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சி பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு மாலை வேலம்பாளையம் நகரக்குழுவுக்கு உட் பட்ட வேலம்பாளையம், அணைப்பாளையம், பெரியார் காலனி, அனுப்பர்பாளையம் ஆகிய 4 மையங்களில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்ற பேரவைகள் நடைபெற்றது. இதில், 500 பேரைத் திரட்டி, செந்தொண்டர் பேரணியில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. இந்த பேரவையில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ரங்கராஜ், ஜி.சாவித்திரி, நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர்கள் அ.ஆறுமுகம், அ.உமாநாத், ஆர்.சுகுமார், ர. கவிதா, பி.பாபு, பி.சின்னச்சாமி, வி.லட்சுமி, பி.நவபாலன் உள் ளிட்ட கிளைச் செயலாளர்கள், ஆதரவாளர்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
காங்கேயத்தில் 325 பேருக்கு திருமண நிதி உதவி வழங்கல்
திருப்பூர் ஏப். 24 - காங்கேயம் கே.வி.ஏ. திருமண மண்டபத் தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றையின் சார்பில் 325 பயனாளிகளுக்கு ரூ. 3.03 கோடி மதிப்பீட்டில், திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல் விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர். திங்களன்று மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தலைமையில், காங்கேயம் கே.வி.ஏ திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தாரபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரே சன், திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டலத்த லைவர் இல.பத்மநாபன், மாவட்ட சமூக நல அலுவலர் நா.ரஞ்சிதா தேவி மற்றும் தொடர் புடைய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
மாதர் தேசிய சம்மேளன ஒன்றிய மாநாடு
அவினாசி, ஏப். 24 - அவிநாசி இந்திய கம்யூ னிஸ்டு கட்சி அலுவலகத்தில் இந்திய மாதர் தேசிய சம் மேளனத்தின் ஒன்றிய மாநாடு தனிஸ்லாஸ் தலை மையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட் சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட துணைச் செயலா ளர் மோகன், மாதர் சம்மேள னத்தின் மாவட்ட கன்வீனர் நதியா ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் அவிநாசி ஒன்றிய தலைவ ராக சாவித்திரி, செயலாள ராக பேபி, பொருளாராக கோவிந்தமணியும் 11 பேர் கொண்ட ஒன்றிய குழு வும் தேர்வு செய்யப்பட்டது.