districts

img

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மாதர் சங்க நிர்வாகிகள் மனு

திருப்பூர், டிச.4- நுண் நிதி நிறுவனங்கள் சம்பந்தமாக ரிசர்வ் வங்கி ஆளு நருக்கு மனு அனுப்ப கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு  அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நுண் நிதி நிறுவனம்  முன்னுரிமை கடன் அளிப்பு இருந்து நீக்குதல், தனியார் கடன்  வழங்குபவர்களுக்கு அதிகபட்சமாக 12 சதவீத எளிய வட்டி  விகிதமாக வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். ரிசர்வ்  வங்கி பொதுத்துறை வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கி கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகிய வற்றுக்கு 4 சதவீத (அரசு மானியத்துடன்) 9 சதவீதம் வரை முன் னுரிமை துறை கடன் அளிப்பு விகிதத்தில் நுண் நிதி கடன் களை தாராளமாக வழங்க அறிவுறுத்த வேண்டும். சுய உத விக் குழுக்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில்  கடன்கள் வழங்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கும் விதிமுறைகளை மறு சீரமைப்பு செய்து  30 சதவீத கடன்களை நேரடியாக மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கு வழங்க வேண்டும். நுண்நிதி நிறுவனங்களால் துன்பு றுத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளைப் பெறவும் அவற்றை  தீர்ப்பதற்கும் அனைத்து மாநில, மாவட்ட மையங்களில் ஒரு  அமைப்பு உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இதில், மாவட்டத் தலைவர் பவித்ரா தேவி, மாவட்டப்  பொருளாளர் கவிதா, துணை நிர்வாகிகள் பானுமதி, லட்சுமி,  மைதிலி, சகிலா, செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.