districts

img

ரேசன் கடைகளில் காய்கறிகளை விநியோகிக்க மாதர் சங்கம் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 11 - தமிழ்நாட்டில் அத்தியாவசிய காய்கறிகள் விலை கடுமை யாக உயர்ந்திருக்கும் நிலையில், தக்காளி சின்ன வெங்காயம்  இஞ்சி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை விவ சாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் பொருத்தமான விலையில் விற்பனை செய்ய  வேண்டும் என்று வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தி னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் நியாய விலை கடைக ளில் பொருத்தமான விலைகளில் தக்காளி, சின்ன வெங்கா யம், இஞ்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகம்  செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மனுவில் கேட்டுக் கொண்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருப்பூர் மாவட்ட  குழு சார்பில் செவ்வாயன்று இந்த மனு அளிக்கப்பட்டது இந் நிகழ்வில் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பவித்ரா தேவி, மாவட்டச் செயலாளர் கே.சரஸ்வதி, மாவட்ட பொருளா ளர் ஆர்.கவிதா, மாவட்ட துணைத் தலைவர் ஜி.சாவித்திரி, தெற்கு நகர செயலாளர் சி.பானுமதி, தெற்கு நகர தலைவர்  மினி, தெற்கு நகர கமிட்டி உறுப்பினர் சசி ஆகியோர் பங்கேற் றனர்.